பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்ட
தைக் கண்டு அதைத்தடுக்க காவிரியில் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள்
.
.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே குறுகுறு வென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள்
இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திர மாக மாற் றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின்மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண் டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பி ன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறை யை வைப்பார்கள்.நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக் கொள்
ளும். இப்படிப் பாறைக ளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்தான் இந்த அணையைப் பற்றிப் பல காலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘தி கிராண்ட் அணைக்கட்’ என்றார் சர் ஆர்தர் காட்ட ன். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
No comments:
Post a Comment