முதலில் புட்டியில் நீரை நிரப்பி அதை மூடியால் இறுக மூட வேண்டும். இவ்வாறு நீர் நிரப்பட்ட புட்டிகளை வீட்டுக் கூரையில் அல்லது மாடித் தரையில் நன்றாக வெயில் படும்படி குறைந்தது ஆறு மணி நேரத்துக்குப் படுக்கை வசத்தில் வைத்தல் வேண்டும். காலை ஒன்பது முதல் மாலை மூன்று மணி வரை வைத்திருத்தல் சிறப்பு.
வெயிலில் உள்ள புற ஊதாகதிர்கள் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்தையும் அடியோடு அதாவது 99.99% நீக்குகிறது. பிறகு இப்புட்டியை திறந்து நீரை பருக வேண்டியதுதான். இது முழுக்கவே தூய்மை செய்யப்பட்ட குடிநீராகும். இது நீரை காய்ச்சி குடிப்பதற்கு சமமாகும். ஆனால் இதில் எந்த எரிப்பொருள் செலவும் கிடையாது என்பது சிறப்பு.