DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, October 28, 2012

உப்பு தண்ணிரை தூய குடிநீராக்கும் சூரிய அடுப்பு





இத்தாலிய வடிவமைப்பாளர் ஆன காப்ரியல் டைய மோனிட் மாணவராக இருக்கும் போது மேற்கொண்ட பயணங்களில்  பார்த்த உலக  குடி தண்ணீர் பற்றாக் குறை வெகுவாகப் பாதிப்பை ஏற்படுத்தியது.  வடிவமைப்பாளர் என்ற முறையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் படத்தில் பார்க்கும் சூரிய அடுப்பு. உப்புத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் கடற்கரை பகுதிகளில் இது வெகுவாகப் பயன் படும்

எலியோடா மெச்டிகோ என்ற இந்த அடுப்பு ஒரு தலை கீழான காபி வடிகட்டி போல செயல் படுகிறது.  இந்த செராமிக் அடுப்பு மூன்று பாகங்களால் ஆனது. இதன் கருப்பான மேல் பாகத்தில் தான் உப்புத் தண்ணீர் ஊற்றப் படுகிறது. சூரிய ஒளியால் தண்ணீர் சூடாக்கப் படும் போது நீராவி உண்டாகிறது. அப்போது ஏற்படும் அழுத்தம் நீராவியை மத்திய பாகத்தில் உள்ள ஒரு குழாய் வழியாக கீழே தள்ளுகிறது.  இது அடிபாகத்தில் தண்ணீராக மாறி தேங்குகிறது. வட்டப் பாத்திரம் போல இருக்கிற அடிப்பாகத்தை வெளியில் இழுத்து அதில் இருக்கும் நல்ல தண்ணீரை குடிக்கப் பயன் படுத்தலாம். இந்த அடுப்பில் ஒரு நாளைக்கு 5   லிட்டர்கள்  நல்ல தண்ணீர் பெறலாம்.

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்




மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள்

மழை மேகங்கள் ஏன் கருப்பாகத் தோற்றம் அளிக்கின்றன?




மேகங்கள் சிறுசிறு நீர்த்துளிகளையும்,ஐஸ் படிமங்களையும் உள்ளடக்கியன. இருப்பினும் சில வெண்மையாகவும் சில சாம்பல் நிறத்திலும் காணப்படுகின்றன.ஒரு வடிவத்திலிருக்கும் மேகத்தில் சூடான காற்று படும்போது ஐஸ் படிமங்கள் ஆவியாகி,மேகங்களின் வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.
       
மேகங்களில் பலவகை உண்டு.ஸ்ட்ராட்டஸ்(stratus) என்னும் வகை தட்டையாகவும்,க்யூமுலஸ் (cumulus) என்னும்  வகை கண்கூகம் வெண்மையாகவும் காணப்படும்.இதில் வெறும் நீர்த்துளிகள் மட்டுமே உள்ளன.சிர்ரஸ்(cirrus) என்னும் வகை ஐஸ் படிமங்களை மட்டுமே கொண்டுள்ளன.இவை அதிக உயரத்தில் காணப்படுகின்றன.மேற்கூறிய அனைத்து வகை மேகங்களிலும் நீர்த்துளிகள் ,ஐஸ் படிமங்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன.இவற்றில் ஸ்ட்ராட்டஸ், ஸ்ட்ராட்டோக்யூமுலஸ் மேகங்கள் மழைத் தூறலை உண்டாக்கும்

பிறந்த குழந்தை உடனடியாக அழ வேண்டும் ஏன்?



குழந்தை கருப்பையில் இருக்கும்வரை இளம் சூடான, பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும்.அது பிறந்தவுடன் சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.வெளிப்புறத்திலுள்ள வெப்பநிலை குழந்தையின் தோலில் பட்டவுடன்,தோல் தூண்டப்பட்டு குழந்தை ஆழ்ந்து சுவாசிக்கிறது.

முதன் முதலில் சுவாசிக்கும்போது நுரையீரலினுள் புகும் காற்று, குழந்தையைத் தேம்பச் செய்து (gasp) அழுகையை உண்டாக்குகிறது.

குழந்தை பிறந்தவுடன் அது வீறிட்டு அழ வேண்டும்.அதுவே குழந்தையின் சுவாசம் சீராக இருப்பதற்கான அறிகுறியாகும்.குழந்தை பிறந்தவுடன் அதன் அழுகைக் குரல் வேறுபட்டிருந்தால் சுவாச உறுப்பு,முளை போன்ற உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்பது மருத்துவர்களின். கருத்தாகும்.குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் அழுகையும் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டிருக்கும்.

அனிமேஷன் படித்தால்




மிகக் குறுகிய காலத்திலேயே மிகக் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது டிசைன்,மல்டி மீடியா மற்றும் என்டர்டெயின்மெண்ட் துறைகள். உலகெங்கிலும் அனிமேஷன் துறை வளர்ந்து வருவதைப் போலவே இந்தியாவிலும் இந்தத்துறை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அழகியலும்,கலை உணர்வும்,தொழில் நுட்பமும் இணையும் அனிமேஷன் துறை, இன்றைக்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் புரளும் துறை.
                                   
2டிஅனிமேஷன், 3டி மாடலிங் அண்ட் கிராஃபிக்ஸ், இமேஜ்  எடிட்டிங், ஆடியோ-வீடியோ எடிட்டிங், வெப் டிஸைனிங் அண்ட் அனிமேஷன், எஃபெக்ட்ஸ் அண்ட் விஷூவல் எஃபெக்ட்ஸ், ட்ரீம் வேவர், ஃபளாஷ்.3டி ஸ்டுடியோ மேக்ஸ் போன்று அனிமேஷன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுக் தரப்படுகின்றன.அனிமேஷன் தொடர்பான மற்றொரு பிரபலபான பயிற்சி-மாயா.திரைப்படத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

காய் கனிந்து பழமாகும்போது இனிப்புச் சுவை எவ்வாறு தோன்றுகிறது?




 ஒரு காய் கனியாகும் பருவத்தில் (ripening) அக்காயினுள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதாவது, அக்காயின் சதைப்பகுதி செல்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது எதலீன் (ethylene),இன்வர்டேஸ் (invertase) உள்ளிட்ட பல்வகை என்சைம்களைச் (enzymes) சுரக்கிறது.
                                                    
 இந்த என்சைம்கள் காயின் சதைப்பகுதியை மென்மையாக்குகிறது. கூடவே சதையின் நிறத்தை மாற்றுகிறது. பழத்திற்கு மணத்தைத் தரும் பொருட்களும் (flavour materials) உருவாகி,காய் பருவத்தின் கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நீக்குகிறது.

மழை தருவது சந்தோஷமாக?ஜலதோஷமா?



வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும்.
மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்

கொசுக்கள் ஏன் மனிதனைக் கடிக்கின்றன?




கொசுக்களின் ஆண், பெண் இனச் சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்களின் வயிற்றில் முட்டைகள் உருவாகின்றன. இம்முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ரத்தத்திலிருந்து கிடைப்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனைக் கடிக்கின்றன.

மனிதரின் உடல் உஷ்ணம், வியர்வை, உடல் வாசனை, மனிதர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் கார்பன்டைஆக்ஸைடு, மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சில ஒளிக்கதிர்கள் போன்றவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன.

நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவைகள் வழி தவறாமல் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எவ்வாறு திரும்புகின்றன?




 தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் பறந்து செல்லும் பறவைகள் சூரிய ஒளி, காற்றின் திசை இவற்றைக் கொண்டே தாங்கள் பயணித்த பாதையை அடையாளம் கண்டு கொள்வதாக வெகுநாட்கள் நம்பப்பட்டு வந்த்து. இதில் ஒரளவு உண்மை இருப்பினும், நெடுந்தொலைவில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கான சரியான பாதையை அடையாளம் காண பறவைகளுக்கு வேறொரு ஆற்றலும் உள்ளது. அதாவது, பூமியின் காந்தப் புலனை (Earth's magnetic field) அடியும் ஆற்றலாகும்.
                                        
 பறவைகளின் மூளையில் காந்தப்புலனைக் கொண்டு வழியை அறிந்து கொள்ளும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி ஏரோபிளேனில் அமைந்துள்ள வழி அறியும் கருவிபோல (Compass) செயல்படுகிறது. இது பூமியின் காந்த விசையை    பறவைகளுக்கு உணர்த்தி, தான் பயணித்து வந்த நெடுந்தூரத்தை வழி மாறாமல் சென்றடைய உதவுகிறது

முதலுதவி


                 
    குழந்தைகள் பள்ளியில் இருக்கும் பொழுது, விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில்,அவர்களில் சிலருக்கு விபத்துக்களும் காயங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.பெரும்பாலானவை சிறிய விபத்துக்களாகவே இருக்கும். உதாரணமாக, வெட்டுக்காயங்கள் சுளுக்கு முதலியவைகளை உடனடியாக கவனித்து எளிதில் சிகிச்சை செய்ய முடியும்.

எப்போதாவது விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவையாக அமைந்தால் உடனடியாக சிகிச்சை செய்ய இயலாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக எலும்பு முறிவு ஏற்பட்டால், நீரில் மூழ்கினால், அல்லது பாம்பு கடியால் பாதிக்கப்பட்டால், ஆசிரியர்களாகிய நீங்கள்தான் பள்ளியில் நடக்கும் விபத்துக்களை நேரடியாக கண்டறியவும் மருத்துவரோடு தொடர்பு கொண்டு உதவவும் முதல் நபராக இருப்பீர்கள்.

இரத்த தானம்


நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ வகை தானங்கள் செய்திருப்போம். அவையெல்லாம் அடுத்தவரின் மனக்காலையையோ, பசியையோ போக்கும். ஆனால் நாம் கொடுக்கும் ரத்ததானம் ஒருவரின் உயிரைக் காக்கும். ரத்த தானத்தை சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுத்தோம் என்றால், அதைவிட பெரிய தானம் இவ்வுலகில் இல்லை என்பதே என் கருத்து.

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயி ரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத் தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே! எனவே குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்தால், பல உயிர்கள் காக்கப்படும் என்பதில் நமக்கு திருப்திதானே...

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என மருத்துவ அறிவியல் அறிவுறுத்துவதன் காரணம் என்ன?



 ரத்த சொந்தத்தில், குறிப்பாக நேரடி உறவான அத்தை,மாமா போன்றவர்களின் சந்ததியினரைத் திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் வழிதோன்றும் சந்ததியினருக்கு வெண்குஷ்டம், குறைப்பிரசவம், பிறப்பில் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாலேயே மருத்துவ அறிவியல் அவ்வாறு கூறுகிறது.
           
ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு, மரபு அணுக்களை "AA" என்று குறிப்பதனால், ரத்த சொந்த திருமணதத்தில் பிறக்கும் சந்ததியினர் குறிப்பாக பெண்கள் குறைபாடுடைய மரபணுக்களோடு (Recessive Gene) பிறக்கிறார்கள். அதாவது 'Aa" மரபணுக்கள் அவர்களிடம் காணப்படும். இவர்களின் குழந்தைகளுக்கு மேற்கண்ட நோயோ, குறைபாடோ தோன்ற அதிகம் வாய்ப்பு உண்டு.

தொழில்


வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் SMS , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE". இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.

Saturday, October 27, 2012

உங்கள் கணினிக்கு தேவையான மென்பொருள்கள்


Office

OpenOffice - office suite
Ms office 2010-office suite
PC Suite 602
  - office suite
AbiWord
 - text editor
Atlantis Nova
 - text editor
Microsoft PowerPoint Viewer
  - power point files viewer
Adobe Reader
 - pdf reader
Foxit PDF Reader
 - pdf reader
PDFCreator
 - create pdf documents
Doc Convertor
  - document convertor
Convert
 - unit convertor
Converber
 - unit convertor
Sunbird
 - calendar/organizer
EssentialPIM Free
 - calendar/organizer
PhraseExpress
 - speed up your writing
ATnotes
 - create notes on the desktop 

அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் [A TUBE CATCHER]


இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம்.

நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் சுவையான விளையாட்டு


உங்களின் நண்பர்களையோ ,உறவினர்களையோ ஏதோவது [99தவிர] ஒரு எண்ணினை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்
விதிமுறைகள்
1.மனதில் நினைத்த எண்ணினை இருமடங்கு ஆக்குக
2.4ஐ கூட்டுக
3.5ஆல் பெருக்குக
4.12ஐ கூட்டுக
5.10ஆல் பெருக்குக
6.320ஐ கழிக்க
கிடைக்கும் விடையை சொல்லச் சொல்லுங்கள் அதிலிருக்கும் பூஜ்ஜியங்களை நீக்கிவிட்டால் விடை கிடைக்கும்

Friday, October 26, 2012

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க தளம்


அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே ஒடுவார்கள்.

ஆன்லைனில் இலவசமாக கடைகளுக்கு இன்வாய்ஸ் பில்களை விரைவாக உருவாக்க



பொருள் விவரப்பட்டியல் எனப்படும் இன்வாய்ஸ் பில்களை கடைகளில், நிறுவனங்களில் எதேனும் பொருள்களை வாங்கும் போது கொடுப்பார்கள். நமது கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்வாய்ஸ் பில் கொடுக்க எதாவது மென்பொருள்களை (Customized Softwares) போட்டிருக்க வேண்டும். சிலர் MS-Excel மென்பொருளில் கை வலிக்க அடித்து அதை அழகுபடுத்தி அச்சிட்டுக் கொடுப்பார்கள். சிலர் டேலி மென்பொருளை நாடுவார்கள். உடனே அவசரமாக பில் தேவைப்படுகிறது என்ன செய்வீர்கள்? 

எந்த மென்பொருளின் துணையின்றியும் அதிக வேலையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி ஆன்லைனில் இன்வாய்ஸ்களை உருவாக்கலாம். பல இணையதளங்கள் இந்த சேவையை இலவசமாக கொடுப்பதில்லை. சில இணையதளங்கள் இரண்டு முறை மட்டும் இலவசமாக உருவாக்க இடம் கொடுக்கின்றன. சில தளங்கள் ரெஜிஸ்டர் செய்தால் தான் வேலையைச் செய்ய அனுமதிக்கும். இந்த கட்டாயங்கள் எதுவுமின்றி இலவசமாக இன்வாய்ஸ்களை விரைவாக உருவாக்க இரண்டு தளங்கள் உதவுகின்றன.

BSNL 2Gயிலிருந்து 3Gக்கும் 3Gயிலிருந்து 2Gக்கும் மாறுவது எப்படி?



BSNL நிறுவனத்தின் 3G இணைய சேவையை பயன்படுத்த புதிய சிம் 180 ருபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் 120 ருபாய்க்கு அழைப்புக்கான பேலன்ஸ் மற்றும் 200 Mb டேட்டா அளவுக்கு இணையப் பயன்பாடும் தரப்படுகிறது.

BSNL 2G -> BSNL 3G

உங்களிடம் ஏற்கனவே BSNL 2G சிம் இருப்பின் அதிலிருந்து அப்படியே 3G சேவைக்கு மாறிக் கொள்ள முடியும். முதலில் உங்கள் மொபைல் போனில் 50 ருபாய் பேலன்ஸ் இருக்க வேண்டியது முக்கியம். 

எந்த இன்டர்நெட் இணைப்பையும் WI-FI மூலமாக பல கணினிகளில் பயன்படுத்த மென்பொருள்



கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணினியின் திறனை மேம்படுத்த GAME BOOSTER

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணினியின் திறனை மேம்படுத்த  GAME  BOOSTER
கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில நேரங்களில் தொக்கி நிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணிணியின் டிஸ்பிளெ மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.

விளையாட்டுப் பிரியர்களுக்கான மென்பொருள் [ CHEAT BOOKS DATABASE]


கணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்

பள்ளி,கல்லூரிகளுக்கான YOUTUBEஇன் புதிய சேனல் [ YOUTUBE SCHOOLS]


முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் தளங்கள்


இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம். 

உங்கள் கணினியில் மென்பொருள்கள் ஏதுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ BLOCK ANY IN YOUR COMPUTER]



இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.

வீட்டுக் கடன் EQUATED MONTHLY INSTALMENTS கணக்கு போடுவது எப்படி?


அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள இந்த பக்கத்தில், கடன் தொகை, வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்துவிட்டால், உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத்தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.


’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக்கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா? என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா? நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சுக்கலாம்.




தேவையென்றால், மேற்சொன்ன இரண்டு கால்குலேட்டர்களையும், உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Download EMI Calculator

Download Refinance Calculator

Thursday, October 25, 2012

உங்கள் கணினியின் PASSWORD மறந்து விட்டீர்களா?



தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம்.

சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.

1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்

உலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட


உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது  குரோம் உலாவியின் நீட்சி,,,,,
கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Application இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும் கின்னஸ் வீடியோக்களை All videos, Most Recent, Most Viewed, Categories  என்று பார்வையிடலாம்.


டவுண்லோட் செய்ய - https://chrome.google.com/webstore/


குறிப்பு - கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிட உங்கள் கணினியில் கூகிளின் குரோம் உலாவியை நிறுவியிருக்க வேண்டும்.

Wednesday, October 24, 2012

FACEBOOK CHAT HISTORYஐ DELETE செய்வது எப்படி?



Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.

Tuesday, October 23, 2012

BSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டிலிருந்தபடியே கட்ட


இன்றும் பலர் தங்களது BSNL தொலைபேசி கட்டணங்களை போஸ்ட் ஆபிஸிலோ - தொலைபேசி நிலையங்களிலோ கட்டி வருகின்றனர். இப்போது நமது வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணங்களை சுலபமாக கட்டலாம்.அதற்கான வழிமுறைகளை இன்று காணலாம.இந்த கடிதம் BSNL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வந்திருக்கும்.


Dear Customer,
      BSNL Chennai Telephones offers Rs 5/- discount from the bill amount to those who opt for stoppage of hard copy of bill by post.
Soft copy of the bill in PDF format will continue be sent without any extra charges to all registered customers as at present.
 1% discount will also continue to be allowed for making online payment.
 This is only an Eco-Friendly measure to avoid paper bills.
 Those who are specific in opting for stoppage of hard copy and thereby wish to avail Rs5/- discount in the next bill   can login to http://billchn.bsnl.co.in website and click the  option Stop Hard Copy of Bill by Post.
                                                                                                  Assuring you of our best services always,


நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய


சிலர் கணினியில் இருக்கும் போது இன்றைக்கு 2 அல்லது 3 மணித்தியாலம் இருக்க வேண்டும் என்று சொல்வர்கள்.அவர்களுக்கும் மற்றும் சிலர் ஒரு நாளைக்கு தான் எத்தனை மணிநேரம் கணினியில் இருந்தோம் என்று கேட்டால் தெரியாது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்,இப்படி பட்டவர்களுக்குத்தான் உதவும் இந்த மென்பொருள்.

இதை கணிப்பிடுவதற்காக ஒரு மென்பொருள் இருக்கின்றது இது நீங்கள் கணினியை இயக்கி எத்தை நிமிடம் என்று அல்ல மணித்தியாலயத்தையும் சொல்லும்.பாருங்கள் நீங்கள் ஒரு நாளைக்க எத்தனை மணிநேரம் கணினியில் இருக்கின்றீர்கள் என.
இந்த மென்பொருளின் அளவு 24KB தான் Download

Monday, October 22, 2012

MAGIC தந்திரோபாயங்களை கற்றுக்கொள்ள இணையதளம்



MAGIC அனைவரையும் கவரும் ஒருவகை விளையாட்டு . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த MAGIC விளையாட்டுக்களை ரசிப்பவர்களாக தான் இருக்கிறார்கள் . ஒரு சிலர் செய்துகாட்டும் போது அதன் தந்திரோபயங்களை மற்றவர்களுக்கு சொல்லிகொடுப்பதில்லை . எனவே ஒருசிலர் செய்ய மற்றவர்கள் அதிசயமாக பார்த்து ரசிக்கிறார்கள் . 

இந்த MAGIC தந்திரோபாய ரகசியங்களை வீடியோ மூலம் கற்று கொள்ள 
உதவுகிறது YUDOMAGIC.COM என்ற வீடியோ தளம் 

ஆபாச தளங்களை உங்கள் கணினியில் தடுக்க எளிய வழி




இணையத்தில் எவ்வளவுதான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும். 
இததகைய ஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுப்பதற்கு ஏற்கனவே ஓர் பதிவில் மென்பொருளின் துணையுடன்தடுப்பது குறித்து பதிவிட்டுள்ளேன்.  
மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணினியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும் .

உங்கள் உடல் நலத்தை கண்காணிக்க உதவும் மென்பொருள்


எல்லோருமே நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே அனைவரதும் ஆசை என்னுடைய பிரார்த்தனையும் கூட.
நலமுடன் வாழ உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்தம் உங்கள் உடல் நலனை கண்காணித்து பதிவு செய்து உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும்; வைத்திய தேவைகளுக்கு சமர்பிக்கவும் MY DAILY READING என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. 

Saturday, October 20, 2012

உங்களது PASSWORD அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்வதற்கு


இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொல் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.
இச்சூழ்நிலையில் உங்களது கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவி புரிகிறது.
இதில் உங்களது அனைத்து கடவுச்சொல்லையும் சேமித்து வைத்து, இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு கடவுச்சொல் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

ஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல பேஸ்புக் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தல்?



உலாவி ஒன்றில் ஒரே நேரத்தில் எவ்வாறு பல Facebook கணக்குகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
இதற்காக கூகிள் குரோம் உலாவியையே பயன்படுத்த முடியும். ஏனெனில் கூகிள் குரோமின் நீட்சியை இங்கு நிறுவ வேண்டும். இது கையாள்வதற்கு மிகவும் சுலபமானது.
ஒருமுறை கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் என்பவற்றைக் கொடுத்தால் போதும். அது உலாவியில் முறைமாற்றிச்(Encrypt) சேமிக்கப்பட்டுவிடும்.
ஐந்து வரையான Facebook கணக்குகளை கையாளலாம். (குறிப்பு: உங்கள் சொந்தப்பாவனையில் உள்ள கணணியில் செய்வதே சிறந்தது. ஏனெனில் இது எமது நேரத்தை மீதப்படுத்தும். ஆனால் மற்றவர்களும் எமது கணக்கை பயன்படுத்தலாம்.)

FACEBOOK நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு



மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் பலவிதமான மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனடிப்பயைில் புதிதாக Pin View எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் Pin Viewer என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவவேண்டும்.
இதன் மூலம் நண்பர்களின் சுயவிபரங்களையும், பகிரப்படும் படங்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தனித்தனியாக வேறுபடுத்த முடியும்.

கணினி அடிக்கடி RESTART ஆனால் என்ன செய்வது?



உங்களது கணணி அடிக்கடி Restart ஆவதற்கும், Hang ஆவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.
1. புதிதாக ஏதேனும் ஒரு வன்பொருளை உங்கள் கணணியில் நிறுவி இருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். அதன் பின் அந்த வன்பொருளின் Settings Check பண்ணவும்.

Friday, October 19, 2012

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?




1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல‍ முருங்கைகாய்