DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, July 17, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய, முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

தினசரி இலக்குகளை அடைய உதவும் ஆண்ட்ராய்டு செயலி!

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? இந்த செயல்களை மறக்காமல் செய்து முடிக்க ஒரு நினைவூட்டல் சேவை அவசியம் என்ற எண்ணமும் இருக்கிறதா? ஆம் எனில், ஸ்டிரீக்ஸ் செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் தினமும் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்து, அதற்கான நினைவூட்டலையும் பெறலாம். இதன் மூலம் அந்த செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கான தூண்டுதலையும் பெறலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இதை டவுன்லோடு செய்து கொண்டதும், நீங்கள் தவறாமல் செய்ய விரும்பும் செயலை குறிப்பிட வேண்டும். ஆட் நியூ டாஸ்ட் எனும் கட்டளையை கிளிக் செய்தால் வரும் கட்டத்தில், புத்தகம் படிக்க வேண்டும் என்றோ அல்லது உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றோ உங்கள் விருப்ப செயல்களை டைப் செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அந்த செயலை தினமும் நினைவூட்ட வேண்டுமா? என தெரிவித்து, அதற்கான நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.

Tuesday, July 14, 2015

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.in என்ற முகவரிக்குச் செல்லலாம்

Saturday, July 4, 2015

உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இந்த பிரச்சனைக்கு தீர்வு காண செயலி

செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

சிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம்.

இதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது.

கோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது.www.visarnews.com