DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, June 25, 2016

பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்.

எச்சரிக்கை:

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.

எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

Sunday, June 19, 2016

நீங்கள் பிறந்த தினத்தில் இருந்து இந்த வினாடி வரை பல தகவல்களை அறிய உதவும் இணையதளம்

நீங்கள் பிறந்த தினத்தில் இருந்து இன்றுவரை உங்களுக்கு எத்தனை வருடங்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை நாட்கள்? என்பதனை கூற முடியுமா?


நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இது வரை உங்கள் இதயம் எத்தனை தடவைகள் துடித்துள்ளது/துடித்துக்கொண்டிருக்கின்றது?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை எத்தனை தடவைகள் சுவாசித்துள்ளீர்கள்?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை சந்திரன் எத்தனை தடவைகள் பூமியை வலம் வந்துள்ளது?
நீங்கள் பிறக்கும் போது இந்த உலகில் எத்தனை பேர் உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்? தற்பொழுது எத்தனை பேர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.?

புவி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம் அல்லாவா?
அதனடிப்படையில் அவ்வாறு சுற்றுவதன் மூலம் நாம் பிறந்தது தொடக்கம் இதுவரை புவியின் மையத்தை சுற்றி எவ்வளவு தூரம் பயணித்திருப்போம்?
நீங்கள் பிறந்தது தொடக்கம் இது வரை சூரியனை சுற்றி எவ்வளவு தூரம் பயணித்திருப்பீர்கள்?


இவைகள் தவிர.......

நீங்கள் குழந்தை பாருவத்தில் இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
நீங்கள் சிறுவனாக அல்லது சிறுமியாக இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
நீங்கள் இளைஞனாக அல்லது யுவதியாக இருக்கும் போது உலகில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
உங்களுக்கு 20 வயதாக இருக்கும் போது உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன?


என்பது மட்டுமின்றி

நீங்கள் பிறந்த பின் 500 ஆவது நாளை அடைந்த தேதி  என்ன?
அதே போல் 1,000, 2,000, 5,000, போன்ற நாட்களை கடந்த தேதிகள் என்ன? அதன் பிறகு நீங்கள் பிறந்த தேதியில் இருந்து  10,000,  20,000 நாட்களை அடையும் தேதி என்ன?
நீங்கள் பிறக்கும் போது உலகில் எத்தனை பேர்கள் பிறந்தார்கள்? அவர்களுள் இன்னும் உயிருடன் இருப்பவர்கள் எத்தனை நபர்கள்?
உலகில் உங்களை விட இளமையானவர்கள் எத்தனை பேர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்?


சரி இவற்றுக்கெல்லாம் விடை தருகின்றது Getting Old எனும் இணையதளம் இந்த தளத்துக்குச் சென்று உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் ஒரு சில வினாடிகளிலேயே மேற்கூறப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமான விடையை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையதளம்

http://you.regettingold.com/

Thursday, June 16, 2016

குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவுகள்!


தக்காளி

தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சில சமயங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதன் சுவையும் மாறக்கூடும்.

உருளைக்கிழங்கு

குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்தை தனியே பிரிவதுடன், அது கெட்டியாகவும், இனிப்பு சுவை உடையதாகவும் மாறுகிறது. இதனை தடுக்க அறை வெப்பநிலையிலேயே பேப்பர் பாக்கில் சுற்றி வைக்கலாம்.

தேன்

தேனின் மென்மையான மற்றும் திரவ அமைப்பு மாறாமல் இருக்கவும், கெட்டியாகாமல் தடுக்கவும் அதனை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.

பிரட்

குளிர்சாதன பெட்டியின் உள்ளே பிரட்டை வைப்பதால் அவை காய்ந்தும், கடினமாக மாறியும் பயன்படுத்த முடியாத நிலையை அடையும்.

காபி கொட்டை

குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் மணத்தைப்போக்க ஒன்றிரண்டு காபி கொட்டைகளை உபயோகிக்கலாம். ஆனால் நாம் அருந்துவதற்காக பயன்படுத்தும் காபி தூளை வைக்ககூடாது, ஏனெனில் இதன் உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கி விடும். எனவே இவற்றை அறை வெப்பநிலையில் மூடப்பட்ட கொள்கலனில் சேமித்து வைத்து பயன்படுத்துவதே சிறந்தது.

வெங்காயம்

வெங்காயத்தை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது, ஏனெனில் இது மற்ற காய்கறிகளின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். தேவைப்படும் பட்சத்தில் ஒருநாள் வேண்டுமானால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம்.

Wednesday, June 15, 2016

மனிதனிடமிருந்து நீக்க வேண்டிய தீய குணங்கள்

1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்

Tuesday, June 14, 2016

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்.


1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள் - இயற்கை மருத்துவம்


சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.
* அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.
* அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
* மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.
* உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.
* உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?


1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

இயற்கை மருத்துவம்


1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""
16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”

Monday, June 13, 2016

புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்….!!


குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களின் செல்போனுக்கு Private Number லிருந்து போன் செய்து தாங்கள் கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும் உங்களது செல்போன் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது என்றும் கேள்வி கேட்கிறார்கள். கணவரின் பெயரில் இருக்கிறது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறும்போது அது ஏற்றுக் கொள்ளப்படாது. உங்களுடைய போட்டோக்களையும், முகவரியையும் நாங்கள் கொடுக்க கூடிய நம்பருக்கு அனுப்புங்கள், இல்லையென்றால் உங்களது சிம் கார்ட் ரத்து செய்யப்படும் என வலையில் விழ வைக்கும் நாசக்கார சம்பவம் தமிழகத்தில் நடந்து வருகிறது. மேலும் அவர்கள் கூறும்போது உங்களது சிம் கார்டை ரத்து செய்து விட்டால் கார்டிலுள்ள அனைத்து பணமும் ரத்தாகிவிடும் என்றும் மிரட்டி சொந்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆகையால் குடும்ப பெண்களுக்கு தெரியாத நம்பரிலிருந்து எந்த போன் வந்தாலும் அவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் !


மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் நாம் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய 21 விடயங்கள்
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்..
1 – சிங்கம் எந்த ஒரு விடயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 – கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 – விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 – இரவில் குடும்பத்துடம் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும்.
6 – கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அதிகாலையில் எழுவதில் நன்மைகள்


அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.
அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.
உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக் கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.

Thursday, June 9, 2016

உங்கள் Facebook கணக்கில் Hackers நுழைந்து உள்ளார்களா அல்லது இல்லையா என்பதை பார்ப்பது எப்படி ?

இந்த போஸ்ட் மூலம் உங்கள் Facebook கணக்கு எப்போது எவ்விடத்தில் எந்த Browser இல் எந்நேரத்தில் Login செய்யபட்டுள்ளது என்பதை அறியலாம். இதற்கு முதலில் உங்கள் Facebook யின் Settingsபகுதிக்கு செல்க. அதில் {{Security Option}} கு செல்க அங்கு சென்றவுடன் கணினியில் என்றால் இறுதியில் {{Where You're Logged In}} என்று ஒரு option இருக்கும். Mobile என்றால் {{Active Sessions}} என்று இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் நீங்கள் இதுவரை காலமும் எந்த browser ல எந்த இடத்தில உங்கள் Facebook கணக்கை login செய்தீர்கள் என்பதை காட்டும். அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அதில் தேவையற்ற login பதிவுகளை End Activity கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் . அதன் மூலம் உங்கள் Facebook குறித்த இலிருந்து Logout ஆக்கப்படும் . mobile இல் இவ்வாறு காட்டப்படும். அதில் உங்கள் Facebook Login செய்யப்பட்ட தகவல்கள் காட்டப்படும். அதில் தேவையற்ற login பதிவுகளை Select செய்து Remove கொடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் Facebook குறித்த Software இலிருந்து Logout ஆக்கப்படும்.

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்


* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.
* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம். * சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.
* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம். * உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.
* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.

ராசிகள் - நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்கள் தெய்வம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) சிவன் ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்); - சக்தி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர் பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்) சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,!!

ஒரு உயர் நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,, மாணவன் ,,, அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்,,, டீச்சர் ,,,கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும் ,,,,யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் ,,. மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்,,,இவர்களை பெயரை அழித்தான்,,, டீச்சர் ,,,மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,, மாணவன் ,,., இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்,..கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,, டீச்சர் ,,,இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,,,யார் நீக்குவாய் என்றார்,,, மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,, மாணவன்,,,வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்,,, டீச்சர் ,,மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,.. மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,,யார் பெயரை அழிப்பான் என்று,,. மாணவன் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்,..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,, டீச்சரும்,,,மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு ,..எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை,.. அதற்கு மாணவன் ,,,, மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்,,,மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்,,, கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான்,,,என்றான்,,,, வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு,,,,, இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,,

உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம்.

உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும். IT act section 66A. Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும். IPC Section 509: Word, gesture or act intended to insult the modesty of a woman: Acts of sexual harassment demeaning a woman on the basis of her gender or sexuality - and other forms of sexual abuse faced by women online - can fall under this. one year imprisonment உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள். IPC Section 499: Defamation: Harming the reputation of a person through words, signs, or visible representations. Many women bloggers and Tweeters say that the violent sexist slander they receive goes on to create an irrecoverably negative message for them within their communities, societies, etc. 2 years imprisonment இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது


வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண் இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு ஓங்குயிர் தெற்கு மத்திமம் மேற்கு மரணம் வடக்கு கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.