DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, December 27, 2015

சாம்சங் செல்போன் வைத்திருக்கும் நண்பர்களுக்கு

SAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் சுலோவாக இருக்கும் அதை ஸ்பீடாக மாற்றுவதற்க்கு இதை செட்டிங் பண்ணவும் உங்கள் கீபோர்டில் *#9900# என்று டைப் செய்தால் கீழே
இரண்டாவது படத்தில் உள்ளது வரும் அதில் Debug Level Enabled /Low என்று இருக்கும் அதை அழுத்தினால் HIGH- MID- LOW என்று வரும் இதில் MID யை மட்டும் தேர்வு செய்யவும் பிறகு போன் ஆட்டோமெடிக்காக OFF ஆகி ON ஆகும் பிறகு கமெண்ட் படங்கள் நல்ல ஸ்பீடாக வரும் போன் சுலோ ஆகாது HIGH லெவல் வைக்க வேண்டாம் செய்து பாருங்கள்.

Saturday, December 26, 2015

மின்பூட்டு DIGILOCKER

இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை,
இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும்...
www.digitallocker.gov.in
என்ற தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள்.இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் வழிகாட்டுங்கள்...
www.digitallocker.govdigitallocker.gov

Thursday, September 3, 2015

செயலி புதிது: உலகமே உங்கள் அலுவலகம்!

அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக உருவாகியிருக்கிறது.

லேப்டாப் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றிக்கொள்ளலாம் என்னும் சுதந்திரத்தை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது. இதனால், ஓட்டல் வரவேற்பறை, பொது நூலகம், கஃபேக்கள் எனப் பல இடங்களில் இருந்து வேலைபார்க்க முடிகிறது. அலுவகலத்தில் இருந்து விடுபட்ட நவீன நடோடிகளும் சரி, அலுவலகத்திற்கு வெளியே பணி புரியும் தேவை உள்ளவர்களும் சரி, இத்தகைய பொதுவான பணியிடங்களை விரும்புகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுகிறது கியூப் ஃப்ரி செயலி.

Thursday, August 27, 2015

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!


பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

உங்கள் மூளையின் சுறுசுறுப்பை அறிய உதவும் செயலி!

இந்த செயலியை டவுண்லோடு செய்து , அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, அதன் பின்னர் வைக்கப்படும் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

கேள்விகள் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அதாவது உற்சாக மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது வாடிப்போன மலர்களாக இருக்கிறீர்களா என இந்த செயலி அனுமானித்துக்கொண்டு,  அதன் பிறகு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகளை கேட்டு சோதனை வைக்கும்.

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா


காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2015-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள


ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டால் இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அந்த எண்ணுக்கு உங்கள் இருப்புத் தொகை தானாகவே வந்துவிடும்…
Know ur bank account balance by giving a missed call to below numbers… Don’t waste your ATM transactions just to see your balance… (your mobile number must be given in your bank account )
0 ) Indian overes bank 04442220004
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888 

Wednesday, August 26, 2015

நண்பர்களுடன் பேசியபடி ஷாப்பிங்; பிளிப்கார்ட் செயலியில் புதிய வசதி!

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.

Sunday, August 23, 2015

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு மொபைல் 'ஆப்' அறிமுகம்

ரயில்களில், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஆர் - மித்ரா' என்ற புதிய மொபைல், 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆர் - மித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை, மொபைல் போனில், 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டும். ஆபத்தான நேரத்தில், மொபைல் போனில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், அருகாமையில் உள்ள ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் அளிக்க முடியும்.

இந்த ஆப் மூலம், ஆபத்தில் சிக்கியுள்ள பெண் இருக்கும் இடம், ஜி.பி.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பங்கள் மூலம், ரயில்வே போலீசார் மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு தெரிய வரும். ஆன்லைனில் மட்டுமின்றி, 'ஆப்லைன்' எனப்படும், மொபைல் போனில், இன்டர்நெட் வசதி இல்லாமல் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்க முடியும்.

Saturday, August 22, 2015

உங்கள் பாஸ்போர்ட் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!

உலக நாடுகளின் பாஸ்போர்ட்டின் செல்வாக்கை பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இணையதளம் அடையாளம் காட்டுகிறது. பாஸ்போர்ட்டின் செல்வாக்கு, குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம் அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த பட்டியலின் படி பிரிட்டனுக்கு தான் முதலிடம். அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 147 நாடுகளில் விசா வேண்டாம். அமெரிக்காவும் இதே செல்வாக்கை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 59வது இடம். 59 நாடுகளில் இந்தியர்கள் விசா பெறாமல் செல்லலாம்.

பாஸ்போர்ட் செல்வாக்கு பட்டியல் தனியே கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வரைபடத்தின் மீது கிளி செய்தும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. மேலும் முகப்பு பக்கத்தில் வரிசையாக எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டும் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.

இணையதள முகவரி: http://www.passportindex.org/index.php

உங்கள் வாகன உரிமம் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்!

உலக நாடுகளின் வாகன உரிமத்தின் செல்வாக்கை தொடர்பான விவரங்களை அளிக்கிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த அளவுக்கு சக்தி மிக்கது என்பதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தான் சக்திவாய்ந்த வாகன ஓட்டுனர் உரிமங்களை பெற்றுள்ளன. இந்நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமம் அநேகமாக முக்கிய நாடுகள் எல்லாவற்றிலும் செல்லுபடியாகிறது. இந்த இரு நாடுகளுக்கும் 97 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 96 புள்ளிகளுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், ஸ்வீடன் 93 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு 70 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? ஒரு நாட்டின் வாகன ஓட்டுனர் உரிமம் எந்த எந்த நாடுகளில் எல்லாம், எந்த அளவு செல்லுபடியாகின்றன என்பதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் கூட்டுத்தொகையே இப்படி செல்வாக்காக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்திய உரிமம் மற்ற நாடுகளில் எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போலவே மற்ற நாடுகளின் உரிமங்களின் செல்வாக்கையும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டு உரிமத்திற்கு இந்தியா 12 மாத காலம் அனுமதி அளிக்கிறது. உலக வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், எல்லா உலக நாடுகள் பற்றிய தகவல்களும் கிடையாது. 36 முக்கிய நாடுகளின் விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.

இணையதள முகவரி: http://www.captaincompare.com.au/power-driving-licence/

புதுமையான ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான இணையதளம்!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்வதற்காக என்று புதிய இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 'ஆண்ட்ராய்டு எக்ஸ்பெரிமென்ட்ஸ்' எனும் அந்த தளத்தில் என்ன ஹைலைட் என்றால் புதுமையான மற்றும் விநோதமான ஆண்ட்ராய்டு செயலிகளை மட்டும் இது அறிமுகம் செய்கிறது!

வழக்கமான செயலிகளையோ, வணிக நோக்கிலான செயலிகளையோ இதில் பார்க்க முடியாது. ஆங்ரிபேர்டுகளின் வாரிசு கேம்களும் கிடையாது. மாறாக படைப்பாற்றல் மிக்க முறையில் உருவாக்கப்பட்ட அசத்தலான செயலிகள் மட்டுமே இதில் பட்டியலிடப்படுகிறது. இந்த செயலிகளில் சில, கூகுள் குழுவால் உருவாக்கப்பட்டவை.

பேஸ்புக் லைட் செயலி

பெரும்பாலானவர்கள், வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தியே, பேஸ்புக் தளத்தைக் காண்கின்றனர். இதனால், தரவிறக்கம் செய்வது மிக மிகத் தாமதமாகிறது. குறிப்பாக, புகைப்படங்களை தளத்திற்கு ஏற்றுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இதே நிலை தான்.

இவர்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக், “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. முதலில் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பேஸ்புக் தளத்தினை மிக வேகமாகப் பயன்படுத்த இயலும். படங்கள் அப்லோட் செய்வதும் டவுண்லோட் செய்வதும் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது இந்த செயலி, இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.

கல்வி கடனுக்கான அரசு இணையதளம்


கல்வி கடன் பெறும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு சார்பில் புதிய இணைதளம் துவக்கப்பட்டுள்ளது.www.vidyalakshmi.co.in என்ற முகவரியில் இந்த இணையதளம் செயல்பட உள்ளது.

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது.

'இ-பாய்ஸ்' எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள்' தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.

வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள், முதலில் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு வர காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்புக்கான அவசியத்தை நீக்கி, நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்க வழி செய்கிறது இ-பாய்ஸ் செயலி.

வாட்ஸ் அப்பில் உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை மாற்ற முடியும்..!

ப்ரொபைல் போட்டோ :

உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும். ஆனால், அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப் – ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ் ஆப் அக்கவுன்ட் :

ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

மெசேஜ் :

தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் – டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.

ஆட்டோ இமேஜ் டவுன்லோடு :

வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ, வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் – சாட் செட்டிங்ஸ் – மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்

வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிக்கேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷனஅகளை பெற முடியும்.

வாட்ஸ் ஆப் ஸ்டாட்ஸ்

வாட்ஸ் ஸடாட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ் அப் அக்கவுன்ட்

வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது

போன் நம்பர் வாட்ஸ் ஆப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் – அக்கவுன்ட் – சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்

ஸ்பை

உங்க நண்பரின் வாட்ஸ் ஆப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.

Monday, August 17, 2015

மை ஸ்மார்ட் பிரைஸ் செயலி

ஆன் - லைன் சலுகைகள்: இணையம் மூலம் பொருட்களை வாங்கும், ஆன் - லைன் ஷாப்பிங் வசதியை பயன்படுத்தி கொள்ள விரும்பினால், எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இந்த வகை தளங்கள், பல வகையான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளிக்கின்றன தெரியுமா? இந்த சலுகைகளை தவறவிடாமல் இருக்கவும், சிறந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து வாங்கவும் உதவுகிறது, மை ஸ்மார்ட் பிரைஸ் செயலி. ஆண்ட்ராய்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி நுாற்றுக்கணக்கான மின் வணிக தளங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, குறைந்த விலையில் பொருட்களை தேர்வு செய்து கொள்ள உதவுகிறது. 'பிளிப்கார்ட், அமேசான், இபே, ஸ்னேப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ்' என, எல்லா தளங்களின் விலைகளையும் அறியலாம்.
பணம் செலுத்தும் முறை பற்றிய தகவல்களையும், தள்ளுபடிகளையும் தெரிந்து கொள்ள உதவுவதோடு, தேவையான புதிய பொருட்களை கண்டறியவும் கைகொடுக்கிறது. பொருட்களுக்கான சக பயனாளிகளின் விமர்சன கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம். MySmartPrice என தேடவும்.

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி?

ஐ.எம்.இ.ஐ. கவனிக்க!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐ. எம்.இ.ஐ. எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங் க் பாக்ஸின் வெளிப்புறம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒரு போதும் வாங்க வேண்டாம்.
பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!

ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும் என ஆசைப்படுபவர், பிராண்டட் வகை ஸ்மார்ட்பொன்களையே பரிசீலனை செய்யு ங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மை யுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை வாங்குங்கள்.
முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம்.

Saturday, August 8, 2015

உங்கள் ரயில் பயணச் சீட்டு உறுதியாகிவிட்டதா?- தகவலறிய புதிய செயலி

உங்கள் ரயில் பயணச் சீட்டு உறுதியாகிவிட்டதா என்ற தகவலை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமக்கு ஜாக்பாட் அடிப்பதை விட குதூகலமான விஷயம், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் ரயில் பயணச்சீட்டில் நமக்கான சீட் உறுதியாவது. அவ்வப்போது நமது பி.என்.ஆர் எண்ணை வைத்து பயண்ச்சீட்டு உறுதியாகிட்டதா என்பதைப் பார்க்காதவர் மிகக் குறைவு.

தற்போது இதற்கு ஒரு வழியாக, ரயில்யாத்ரி என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் பயணத்தை திட்டமிடுதல், பயணச்சீட்டின் நிலை என அனைத்தையும் செய்யலாம்  (www.railyatri.in/)

ரயில்யாத்ரி (RailYatri) என்ற இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தாவது அல்லது 08080809551 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தாவது தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இருக்கை கிடைக்குமா என முன்னரே கணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முன்னரே பயணிகள் தங்கள் பயணத்தை சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

பி.என்.ஆர் எண் சரி பார்க்கும் செயலிகள் ஏற்கனவே சந்தையில் இருந்தாலும், மற்ற செயலிகளை விட இதில் அதிகபட்சமான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பதில்கள் தரப்படுகின்றன

குறிப்பிட்ட ரயிலில் இதற்கு முன் எப்படியான முன்பதிவு நடந்துள்ளது?, அதில் எவ்வளவு பேருக்கு சீட்டு உறுதியாகியுள்ளது போன விவரங்களை வைத்து இந்த செயிலின் 'முன்னரே கணிக்கும்' வசதி வேலை செய்கிறது.

Friday, July 17, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய, முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

தினசரி இலக்குகளை அடைய உதவும் ஆண்ட்ராய்டு செயலி!

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற இலக்கு உங்கள் மனதில் இருக்கிறதா? இந்த செயல்களை மறக்காமல் செய்து முடிக்க ஒரு நினைவூட்டல் சேவை அவசியம் என்ற எண்ணமும் இருக்கிறதா? ஆம் எனில், ஸ்டிரீக்ஸ் செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படக்கூடிய இந்த செயலி மூலம் தினமும் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்து, அதற்கான நினைவூட்டலையும் பெறலாம். இதன் மூலம் அந்த செயல்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கான தூண்டுதலையும் பெறலாம்.

இந்த செயலியை பயன்படுத்துவது எளிதானது. இதை டவுன்லோடு செய்து கொண்டதும், நீங்கள் தவறாமல் செய்ய விரும்பும் செயலை குறிப்பிட வேண்டும். ஆட் நியூ டாஸ்ட் எனும் கட்டளையை கிளிக் செய்தால் வரும் கட்டத்தில், புத்தகம் படிக்க வேண்டும் என்றோ அல்லது உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றோ உங்கள் விருப்ப செயல்களை டைப் செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு அந்த செயலை தினமும் நினைவூட்ட வேண்டுமா? என தெரிவித்து, அதற்கான நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.

Tuesday, July 14, 2015

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.in என்ற முகவரிக்குச் செல்லலாம்

Saturday, July 4, 2015

உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இந்த பிரச்சனைக்கு தீர்வு காண செயலி

செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

சிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம்.

இதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது.

கோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது.www.visarnews.com

Friday, June 26, 2015

எந்த போன் வாங்கலாம்..?வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்னை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானதுதான்.

புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பலவற்றை பரிசீலித்தாக வேண்டும். இவற்றோடு வடி வமைப்பு, ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம்? என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் 'விச் போன்' எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணை யதளத்தில், ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வு செய்யலாம்.

ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?!

ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...

* டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆண்ட்ராய்டு: இந்த அப்ளிக்கேஷன் மற்ற அப்ளிகேஷன்களை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

* அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்: இந்த அப்ளிக்கேஷன் மூலமாக அதிகபட்சம் மூன்று ஃபைல்கள் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

* டவுன்லோடு ப்ளேஸர்: இந்த அப்ளிக்கேஷனை அனைத்து வித பிரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.

* டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்: உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு திறன் மிக்கது.
லோடர் டிராய்டு டவுன்லோடு மேனேஜர்: சிறிய அளவிலான இந்த அப்ளிக்கேஷன் எவ்வித ஃபைல்களையும், எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடு செய்யும் சிறப்புக் கொண்டது.

இன்னும் இதுபோன்று பல டவுன்லோடு மேனேஜர்கள் இன்றைக்கு சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் இனி எதையும் விரைவாக டவுன்லோடு செய்யலாம்!

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அறிமுகம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. இனி மைக்ரோசாப்ட் வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்செல் மென்பொருட்களை ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தலாம்.

டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாப்டின் விஸ்டோஸ் இயங்குதளம் கோலாச்சுகிறது. விண்டோஸ் பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்டின் வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகிய மென்பொருட்கள் பிரபலமாக உள்ளன.டெஸ்க்டாப்பில் தட்டச்சு செய்யவும், கணக்குகளை கையாளவும் வேர்ட் மற்றும் எக்செல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், காட்சி விளக்கங்களுக்கு பயன்படும் மென்பொருளாக பவர்பாயிண்ட் விளங்குகிறது.

Thursday, June 25, 2015

நீங்களும் படம் வரையலாம்! புது அப்பிளிக்கேஷன்

Android மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷன்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷனினை வெளியிட்டார். இந்த செயலி மூலம் முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான இந்த செயலி கூகுளின் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதோடு மக்கள் நேரடியாக பிரதமருடன் உரையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வது, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நேரடியாக பிரதமரிடம் இருந்து பெற முடியும்.


லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp&hl=en

உங்கள் மொபைலுக்கு இலவசமாக RECHARGE செய்ய

உங்களிடம் ANDROID மொபைல் இருக்கிறதா? மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா? உங்கள் மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய வழி இருக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் பணத்தை செலவலிக்க வேண்டும். இலவசமாக நீங்களே இலவசமாக RECHARGE செய்து கொள்ளுங்கள்

Earn talktime

.பிறகு அந்த மென்பொருளை OPEN செய்து உங்களுக்கு உங்களின் மொபைல் என்னை கொடுத்து ஒரு அக்கௌன்ட் OPEN செய்து கொள்ளுங்கள்.பின்பு இந்த மென்பொருளில் இருந்து நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொருவருக்கும் 20 ரூபாய் கிடைக்கும்.

தினமும் ரூ 50,100,200 இலவசமாக உங்கள் android mobile மூலம் RECHARGE செய்யலாம். LINKயை CLICK செய்து உங்கள் MOBILEலில் இந்த APP - http://10254531.earntalktime.com download செய்யவும்.

உங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா

ஹார்டுவேர்

வேகமான வைபைக்கு முக்கியமாக அப்-டூ-டேட் ஹார்டுவேரை பயன்படுத்துங்கள் இதற்கு வயல்ரெஸ் என் சிறந்ததாக இருக்கும்

ரவுட்டர்

உங்க ரவுட்டர் பார்க்க அழகாக இல்லை என்று அதை மறைத்து வைக்க கூடாது, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் தான் முழுமையான சிக்னல் கிடைக்கும்

வயர்லெஸ் சேனல்

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வைபை உங்களது வைபைக்கு இடையூறாக இருக்கலாம், இதை சரி செய்ய வைபை ஸ்டம்ப்ளர் அல்லது வைபை அனலைஸர் போன்றவற்றை பயன்படுத்தி உங்க வைபையை சரியான சேனல் கிடைக்கும் இடத்தில் பொருத்துங்கள்

நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள்

இந்த App உலகம் முழுவதும் எங்கு தற்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என்றும் மேலும் அந்த நிலநடுகங்களில் அளவுகளை துல்லியமாக நமக்கு காட்டுகிறது.
.
Earthquake Alert

மேலும் ,இதில் Alert Option உள்ளது அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது அருகில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் உடனே உங்களுக்கு Notification மூலம் Alert தெரிவிக்கப்படும்
.
மேலும் இதில் சில அம்சங்கள் உள்ளது அதை கீழே பாப்போம் :

●Tab between map and list
●Latest quakes in the World.
●Filter what you see
●Click quake to view on map
●Map shows magnitudes
●View details on USGS site
●Alerts and Push notifications!
●Download the Alerter App to be more informed!
●Satellite Map view
●Share to social media
●Report if you felt it to USGS
●Choose what you want to load

ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் Delete செய்த Files களை திரும்பி பெற வேண்டுமா !!

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் தெரியாமல் நீங்கள் Delete பண்ண Files களை திரும்பி பெற வேண்டுமா !!இதோ ஆண்ட்ராய்டு மொபைல்காக Recycle Bin App

அம்சங்கள் :

★உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீங்கள் நீக்கிய புகைப்படம் , ஆவணம் , வீடியோ கோப்புகள் களை மீட்க முடியும்

★மேலும் நீங்கள் நீக்ககூடிய கோப்புகளில் எவ்வாறான கோப்புகளை இந்த மென்பொருள் சேமிக்க வேண்டும் என்பதையும் இதில் தெளிவு செய்யும் வசதி தரபட்டுள்ளது

★உதாரனத்திற்க்கு புகைப்படங்கள் மட்டும் அல்லது வீடியோ கோப்புகள் மட்டும் என தெளிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது

★அது மட்டும்மல்லாம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் இருந்து நீக்கிய ஆண்ட்ராய்டு Application கூட திரும்பிபெற முடியும்

★மேலும் நீங்கள் நீக்கிய கோப்புகள் எவ்வளவு காலத்துக்கு பின் (1 வாரம் , 1 மாதம் , 3 மாதம் ) தானாக நீக்கபட வேண்டும் என்பதையும் தெளிவு செய்துகொள்ளும் வசதி இதில் தரபட்டுள்ளது

எனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமல் வேண்டாம்.

வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு உதவும் அப்ளிக்கேஷன்

வாகன டிரைவர்கள் தமது வாகன டயர்களில் உள்ள காற்றின் அமுக்கத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் அளவிடுவதற்கான அப்ளிக்கேஷனை Fobo நிறுவனம் உருவாக்கியுள்ளது.புளூடூத்தின் உதவியுடன் இணைக்கப்படும் இவை டயரிலுள்ள காற்றின் அமுக்கம் குறையும்போது எச்சரிக்கை செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
Tire Pressure Monitoring System (TPMS) எனப்படும் இத்தொழில்நுட்பத்தினை iOS மற்றும் Android ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக பயன்படுத்த முடியும்.மேலும் இவற்றில் தொடர்ச்சியாக 2 வருடங்களுக்கு மின்னை வழங்கக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ?

நீங்கள் இரவில் அதிகமாக மொபைல் பயன்படுத்துபவரா ? அப்போ உங்கள் கண்களை பாதுக்காக இந்த App பயன்படுத்துங்க பாஸ் !!நண்பர்களே சிலர் இரவில் அதிகமாக மொபைல்லை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கண் கூச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுகின்றது,முழுமையாக Brightness குறைத்தால் கூட சிலருக்கு இந்த எரிச்சல் ஏற்படுகின்றது..

எனவே இந்த எரிச்சல் நாளடைவில் உங்கள் கண்களையே பெரியதாக பாதித்துவிடும்
.
ஆனால் இந்த Appஐ பயன்படுத்துவதால் உங்களை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றது ... நீங்கள் இந்த Appஐ டவுன்லோட் பண்ணிட்டு அதில் Night Mode என்று ஒரு Option இருக்கும் அதை டிக் செய்தால் மட்டும் போதும்..கண் கூச்சல் அல்லது எரிச்சல் போன்ற ஆபத்தில் இருந்து உங்களை பாதுகாக்கின்றது..

பெண்கள் பேஸ்புக்கில் தவறாக சித்திரிக்கப்படுவதை தடுக்கும்வழிமுறை

இணையத்தில் சாதாரண பெண்களின் புகைப்படங்களை எடுத்து மோசமான பக்கங்களில் பகிரும் அவலம் மிக சர்வ சாதரணமாக நடக்கிறது. பெண்கள் இதற்காக மனம் குமுறி இணையத்தை விட்டு விலகவும் நேரிடுகறது. ஆனால் எந்த தனிநபரின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியில்லாமல் பகிருவது, அதுவும் மோசமான பக்கங்களில் பகிருவது அதிலும் பாலியியல் சமபந்தபட்டு மோசமாக பின்னூட்டம் இடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.

எனவே புகைப்படம் பகிரப்பட்ட பெண்கள் அந்த பக்கங்களில் இருந்து புகைப்படத்தை எடுக்க வைக்கலாம். முக்கியமாக பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உடனே பெண்கள் ப்ளாக் செய்கிறார்கள். ஆனால் ரிப்போர்ட் செய்துவிட்டே ப்ளாக் செய்யவேண்டும். ரிப்போர்ட் செய்யும் முன் அவர்கள் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பக்கத்தை சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்து கொள்வதால் பிறகு தேவை என்றால் கம்ப்ளயின்ட் செய்ய வசதியாக இருக்கும்.
ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படி?

1. புகைப்படதுடன் அந்த பக்கத்தின் பெயரும் ஸ்க்ரீனில் தெரியும்படி வைக்கவேண்டும்.

2. வேறு Tab கள் இருந்தால் அனைத்தையும் மூடிவிட்டு இந்த பக்கம் மட்டும் தெரியும்படி வைக்கவேண்டும்.

3. விண்டோஸ் கீ போர்ட் ல் வலது பக்கத்தில் prt sc என்று எழுதப்பட்ட பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்தால் ஸ்க்ரீன் காப்பியாகும்.(copy)

4.MS Paint சென்று paste செய்தால் இந்த ஸ்க்ரீன் அப்படியே சேவ் ஆகிவிடும். பிறகு அதை Folder ல் சேவ் செய்து கொள்ளலாம்.

இவை நமக்கு வழக்கு செய்ய ஒரு சாட்சியாக இருக்கும். எனவே முதலில் சாட்சியாக ஆதாரங்களை எடுத்து வைத்து கொண்டு ரிப்போர்ட் செய்தல் மிக நலம்.

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்


ஈக்கள், கொசு, கரப்பான்பூச்சி, மூட்டை பூச்சி, வண்டு சிண்டு என வீட்டில் நம்மோடு பலவகை பூச்சிகளும் குடித்தனம் நடத்தி வரும். சில பூச்சிகள் வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது, வண்டுகளை போல. ஆனால், சிலவன நம்மை நிம்மதியாக ஓரிடத்தில் உட்கார விடாது, 10 நிமிடங்கள் கூட தூங்கவிடாது தொல்லை செய்துக்கொண்டே இருக்கும், மூட்டை பூச்சிகளை போல.

கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்!!

இவற்றை எல்லாம் துரத்த வெளியில் கடையில் இருந்து இரசாயன மருந்துகளை வாங்கி கொண்டு வந்து அடித்தால், நாம் தான் ஓர் நாள் வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டுமே தவிர, அவை வீட்டில் ஜம்மென்று இருக்கும். வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க… வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் இருக்கும் போது ஏன் வீணாக சிரமப்பட வேண்டும்….
 கொசுக்களுக்கு பூண்டு கொசுவினை விரட்ட சிறந்த மருந்து உங்கள் சமயக்கட்டில் இருக்கும் பூண்டு. நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது

Friday, June 12, 2015

நீங்கள் அம்மா சாயலா… அப்பா சாயலா? கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன்

பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா?
ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேள்விதான். இதற்கான பதில் அவரவர் பார்வையில் இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பை ஒரு சாப்ட்வேரிடம் விட்டால் எப்படி இருக்கும்? அதைதான் ‘லைக்பேரண்ட் ஆப்’ செய்கிறது.
தாங்கள் யார் சாயலில் இருக்கிறோம் என அறிய விரும்பும் நபர், இந்த செயலியில் தங்கள் புகைப்படம் மற்றும் பெற்றோர் படங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, யாருடைய சாயல் என ஆய்வு செய்யும் பகுதியை க்ளிக் செய்தால், பெற்றோர் இருவரில் யாருடைய சாயல் அதிகம் என சதவீத கணக்கில் தெரியவரும்.
பையனோ, பெண்ணோ அச்சு அசல் அம்மா சாயல் என வைத்துக்கொள்ளுங்கள் இந்த செயலி அம்மாவைப் போல 70 சதவீதம் இருப்பதாக சொல்லலாம். சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? அதில் சந்தே கம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் இந்த செயலியின் கணிப்பு துல்லியமானது என்று சொல்வதற்கில்லை. துல்லியமானது என இந்த செயலியும் சொல்லவில்லை. இதன் பின்னே பெரிய சாப்ட்வேர் ஆய்வு எல்லாம் கிடையாது. முற்றிலும் பொழுதுபோக்கிலான அம்சமாக இது செயல்படுகிறது

Thursday, April 16, 2015

நேரா நேரத்துக்கு மருந்து சாப்பிட சொல்லும் ஒரு ஆப்ஸ்

இப்போது உங்களுக்கு நேரா நேரத்துக்கு மருந்து சாப்பிட சொல்லும் ஒரு ஆப்ஸ் வந்திருக்கிறது. மொபைல் ஃபோன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற ஒரு கால கட்டம் இப்போது, அந்த மொபைல் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்களை மக்கள் தினமும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

சிலர் பேசவும், சிலர் வாட்ச்சுக்கு பதிலாய் ஃபோனையும் மற்ற பலரோ இதில் நிறைய ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பலனை அனுபவித்து வருகின்றனர். இப்போது MyHealthSaverz என்னும் ஒரு ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தால் எந்த எந்த நேரத்தில் எந்த எந்த மாத்திரை மருந்துகளை சாப்பிட வேண்டும் என கரெக்டான நேரத்தில் உங்களுக்கு தெரியபடுத்தும், நீங்கள் மருந்து சாப்பிட மறந்து போய் வாட்ஸப் மற்றும் எஸ் எம் எஸ் வழி மெய் மறந்து சேட் செய்து கொண்டிருந்தால் அங்கே வந்து உங்களுக்கு நியாபகபடுத்தும்.
ஒரு கோர்ஸ் சாப்பிட சொன்ன மருந்துகளில் எவ்வளவு சாப்பீட்டீர்கள், எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை கரெக்டாய் சொல்லிவிடும். இது சில இந்திய மொழிகளில் கூட வேலை செய்யும். அது போக நீங்கள் வாங்கிய மருந்து எவ்வளவு மிச்சம் இருக்கிறது அடுத்து எப்போது வாங்கி ஸ்டாக் செய்ய வேண்டும் என்பதை கூட கரெக்டாய் சொல்லும்

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்

நமது பாஸ்வேர்டு – ய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்ன வென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Softwareஆகும்.

எனவே இந்த Program இ ருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டு களை மற்றவர்கள் மிக எ ளிதாக கண்டுபிடிக்கலாம் .

நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online BANK ACCOUNT-ய் தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப் பட்டுவிடும்.பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடை யேபாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப்செய்து பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கி விடு ங்கள். கீ லாக்கர் போன்றProgram-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள் ளும்.
எனவே நம்பாஸ்வேர்டுக ளை மற்றவர்கள் இதன்மூல ம் அறிந்து கொள்ள முடியாது.Online BANKAccount & Credit Card போன்ற முக்கியவேலைகளை இ ணையத்தில் நீங்கள் செய்யும்பொ ழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பது Secure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய வழிமுறைகள் உள்ள து.BANKபோன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய் வாங்கி வைத்து இருபார் கள் அவர்களின் வாடிகையளர்களின் நன் மைக்காக

மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?

நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்

அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்

என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

Sunday, April 5, 2015

ஆன்டிராய்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி?

ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்..

அப்டேட் ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது.ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

யுஎஸ்பி டீபக்கிங் ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும்.

ஸ்கேன் யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கான்டாக்ட் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி மூலம் டெக்ஸ்ட் மெசேஜஸ், கான்டாக்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை ரிக்கவர் செய்ய முடியும். ஸ்கேன் செய்து முடித்த பின் ரிக்கவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பேக்கப் இதையடுத்து சீரான இடைவெளியில் ஆன்டிராய்டு கருவியை பேக்கப் செய்ய வேண்டும்.

ஈ.சி. சான்றிதழ் பெற

சொந்தமான வீடு, மனை வைத்திருப்பவர்களுக்கு வில்லங்கச் சான்றிதழ்(ஈ.சி.) (EC - Encumbrance Certificate) பற்றி நன்றாக தெரியும். சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும். இப்போது இந்த ஈ.சி.யை ஒரு ரூபாய் செலவு செய்தால் போதும், வாங்கிவிடலாம். இதை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை செய்துள்ளது. பொதுவாகவே ஈ.சி. கிடைக்க நிறைய பேர் தரகரை நாடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஒன்றுக்கு மூன்று முறை நடையாய் நடக்க வேண்டும். இப்போது அந்தக் கஷ்டமே இல்லை. ஒரு ரூபாயில் ஆன்லைனிலேயே எடுத்துவிடலாம். இதை வீட்டுக்கு கொரியர் அல்லது துரித அஞ்சலில்கூட அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்.
ஈ.சி. எடுக்க 1 ரூபாய்தான். முதல் வருடத்துக்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷத்துக்கான கூடுதல் ஆவணம் பெற 5 ரூபாய் செலுத்த வேண்டும். பத்து வருடத்துக்குத் தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவாகும். இதை வீட்டுக்கு கொரியர் செய்ய 25 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள செலவு என மொத்தமே 100 ரூபாய் தான் செலவு.
மேலும் பதிவு ஆவணம், சிட்டா அடங்கலின் நகல்கூட இங்கு கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து தரலாம்.
இப்படி சொத்து சார்ந்த ஆவணங்கள் மட்டுமல்ல, பதிவு திருமண சான்றிதழ்கூட ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு கட்டணம் ஒரு ரூபாய். அதை கொரியரில் அனுப்பி வைக்க ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய். கொரியர் கட்டணம் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் ஆவணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் லிங்குகள் உள்ளன. அரசாங்க சொத்து வழிகாட்டி மதிப்பு பெறவும் முடியும். இதனால் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு முத்திரைத் தாள் என்பதை முன்னமே திட்டமிடவும் முடியும். கீழே உள்ள இணையதள முகவரிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஈ.சி. சான்றிதழ் ஆங்கிலத்தில் பெற
ஈ.சி. சான்றிதழ் தமிழில் பெற
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
திருமணத்தைப் பதிவு செய்ய
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
சொசைட்டி ரிஜிஸ்டர்
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற

Thursday, March 26, 2015

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் அப்ளிகேஷன்

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“  என்றார்.

செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது. 

Friday, March 20, 2015

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி

Saturday, February 21, 2015

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் மென்பொருள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளஇயலும்.

ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான இந்த மென்பொருள் மூலம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கடந்த வருட கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

தற்போது 2011 மற்றும் 2013 வருடத்தின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்ய முடிகிறது.                                                                                                                                                      இந்த மென்பொருளுக்கான Google Play பக்கத்திற்கு கீழே க்ளிக் செய்யவும்.

https://play.google.com/store/apps/details?id=com.rasheed.hikma&hl=en

Friday, February 6, 2015

உங்கள் ‪#‎ANTIVIRUS‬ சரியாக வேலை செய்கிறதா!! என பார்க்க

1. Start ஐ Click செய்யுங்கள் .
2.பிறகு Notepad ஐ Open செய்யுங்கள்.
3.பிறகு கீழே உள்ள Code களை Notepad இல் Paste அல்லது Type செய்யுங்கள்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
4.பிறகு அந்த Notepad File ஐ With The Name Fakevirus.exe என்ற பெயரில் Save செய்யுங்கள்