DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, June 25, 2017

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

 வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் அடைப்புகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசகுழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
http://ranjithcronje.blogspot.qa
வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
வெங்காயத்தில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரி செய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் உள்ள ஆன்டி - செப்டிக் மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.
பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பெண்கள் தலையில் பூ வைப்பதால் ஏற்படும் நன்மைகள்


பூக்களைச் சூடும் கால அளவு
முல்லைப்பூ - 18 மணி நேரம்

 அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
பூக்களின் பயன்கள்:
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
பூக்களைச் சூடும் முறை:
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்,இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு உள்ளவர்கள் மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா?


ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்

  ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், தினமும் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் இதயத்துடிப்பு சீராகும். இதயத் தசைகள் வலிமையாகும்.
ஆனால் பளு தூக்கும், தலையை அசைக்கும் பயிற்சி, டிக்லைன் பென்ச் பிரஸ் (Decline Bench Press), டிக்லைன் ட்ரைசெப்ஸ் (Decline Triceps) போன்ற பயிற்சிகளை செய்யக் கூடாது.
இதய நோய் உள்ளவர்கள்
முதலில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரை அணுகவேண்டும்.
ஏனெனில் நோயின் தன்மையைப் பொறுத்து தான் இவர்கள் வேகமான, சாதாரண மற்றும் மெல்லிய இவற்றில் எந்த நடைப்பயிற்சியை செய்யலாம் என்று பரிந்துரைக்க முடியும்.
http://ranjithcronje.blogspot.qa
மாரடைப்பு உள்ளவர்கள்
மாரடைப்பு ஏற்பட்டவர்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் ரத்தக்குழாய் சுருங்கி மீண்டும் மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால் கை மற்றும் கால்களை வேகமாக வீசி நடக்காமல், மெல்லிய நடைப்பயிற்சியை மிதமாக செய்யலாம்.
பக்கவாதம் உள்ளவர்கள்
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சாதாரண நடைப்பயிற்சியை செய்யலாம். ஆனால் வேகமான நடைப்பயிற்சி மற்றும் பளு தூக்கும் பயிற்சியை செய்யக் கூடாது.

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?


அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

 தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
http://ranjithcronje.blogspot.qa
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்குமா?


பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக் கொண்டே இருக்கும்.

 இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
http://ranjithcronje.blogspot.qa
ஒயிட் சாக்லெட், டார்க் சாக்லெட், மில் சாக்லெட் எனச் சாக்லெட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லெட்களும் கொழுப்புச் சுரங்கம் தான்.
100 கிராம் சாக்லெட்டில் 30 – 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.
சாக்லெட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லெட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்து விடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக் கொள்ளும்.
இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லெட்டைத் தவிர்ப்பதே நல்லது.

தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?


இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
http://ranjithcronje.blogspot.qa
அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள், உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம். விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை.
ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
எப்போதாவது ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்சனை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்

லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?


லிப்ஸ்டிக்கில் கலந்துள்ள ரசாயனங்கள் அவர்களது உடலில் கலந்து பக்க விளைவுகளும், நோய் தொற்றுகளையும் உண்டாக்குவதாகவும், இது அவர்களுக்கே தெரியாமல் புற்றுநோய் உருவாகுவதால் பின்னாளில் அவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை வரும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 கூந்தலுக்கு போடும் ஷாம்பு, கண்ணுக்கு போடும் மை ஆகியவற்றிலும் ரசாயனம் இருந்தாலும் உதட்டுக்கு பூசப்படும் லிப்ஸ்டிக்கில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இந்த ரசாயனங்கள் மிக எளிதாக நம் உடலுக்குள் சென்று புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
http://ranjithcronje.blogspot.qa
பெண்களின் உதடுகள் இயற்கையாகவே அழகாக இருக்கும் போது ஏன் லிப்ஸ்டிக்கை போட்டு அழகை கெடுத்து கொள்ள வேண்டும் என்றும், அது மட்டுமின்றி சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போல் காசு கொடுத்து ஏன் புற்றுநோயை விலைக்கு வாங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பெண்களுக்கு அறிவுறித்தியுள்ளனர்

ரத்த வகை மற்றும் அதற்கேற்ற உணவு


பொருத்தமான உணவு வகைகள்
காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

  இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும்.
'ஏ' பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள், கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.
'பி' இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
'ஏ'பி' பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.
'ஓ' இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ், காலிபிளவர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

பெண்கள் தங்கள் முகநூல் ப்ரோபைல் படத்தினை பாதுகாத்திட எளிய வழி!


இந்தியாவில் பிரபல சமூக வலைத்தளமான முகநூலினை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் கணக்கின் சுயவிவர (ப்ரோபைல்) படத்தினை, தவறான நபர்களிடம் இருந்து பாதுகாக்க 'பேஸ்புக் கார்ட்' என்ற வசதியை அறிமுகப்படுத்துகிறது
எவ்வாறு இந்த வசதி செயல்படுகிறது?

  நீங்கள் வழக்கமாக உங்கள் முகநூல் கணக்கினில் உள்ளே நுழைந்தவுடன் 'நியூஸ் பீட்' பகுதியில் முதலாவதாக 'உங்கள் ப்ரோபைல் படத்தினை பாதுகாக்க விரும்புகிறீர்களா? என்று ஒரு கேள்வி தோன்றும். அதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தவுடன், ஒரு செய்தி பெட்டி ஒன்று திரையில் மிளிரும். அதில் பேஸ்புக் கார்ட் (facebok gurad) வசதியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகநூல் கணக்கினை கீழ்க்காணும் மூன்று வழிகளில் பாதுகாக்கலாம்' என்ற செய்தி தோன்றும். http://ranjithcronje.blogspot.qa
அவையாவன, இனி உங்கள் ப்ரோபைல் படத்தினை யாரும் பதிவிறக்கம் செய்யவோ, பகிர்ந்து கொள்ளவோ அல்லது முகநூல் செய்தி பரிமாற்ற செயலியின் மூலம் செய்தியாகவோ அனுப்ப முடியாது
இரண்டாவதாக முகநூலில் உங்களுக்கு நண்பர்களாக இல்லாதவர்கள் உங்கள் படத்தினை முகநூலில் எங்குமே 'டேக்' செய்ய இயலாது.
இறுதியாக உங்களது ப்ரோபைல் படத்தினை சுற்றி நீல நிறத்தில் விளிம்பு ஒன்று தோன்றும். இதன் மூலம் உங்களது ப்ரோபைல் படமானது ‘பேஸ்புக் கார்ட்’ வசதி மூலம் பாதுகாக்கப்படுவது அனைவருக்கும் தெரிய வரும்.
இந்த செய்திகளுக்கு கீழே உள்ள 'அடுத்து' என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களது புகைப்படம் பாதுகாக்கப்படும் உங்களுக்கு எப்பொழுது இது பிடிக்கவில்லையோ, அப்பொழுதே நீங்கள் உங்கள் ப்ரோபைல் படத்தினை கிளிக் செய்து,அமைப்புகளை பழையபடியே மாற்றிக் கொள்ளலாம்.

Saturday, January 7, 2017

கடல் அலைகள் தோன்றுவது ஏன்?



கடல் அலைகள், சாதாரணமானது இல்லை. மேலோட்டமா பார்ப்பதற்கு வேண்டுமானால் அலைகள், சாதாரணமாக தெரியலாம்.
கடல் அலைகள் தோன்றுவது, பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்பு சக்தியினால்தான். அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தான்! பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, கடலைப் பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.
நகர்ந்து கொண்டே, இடம்மாறிக் கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும், தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ‘இனர்ஷியா’ என்னும் உலகின் மாறா நிலைப்பு தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது http://ranjithcronje.blogspot.qa தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்!
இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தை நிலவின் ஈர்ப்பு விசையின் திசையில் தொடர்ந்து நகரச் செய்யும் என்று கூறப்படுகிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே, கடல் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கி வரும்போது,  அடுத்து, பூமி, நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது என இருமுறை கடல் எழும்புகின்றன. இதனை அமெரிக்காவின் மசாச்சு செட்ஸ் நகர கடல் ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகின் புவியியல் அமைப்பு, அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில், இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்.  கொசுறா ஒரு 50 நிமிஷம் ஏன் என்று கேட்டால், பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது, நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth).
சூரியனும் அலைகளும்!
அலைகள் ஏன் ஓய்வதில்லை என்பதற்கு நிலவு மட்டுந்தான் காரணம் என்று கருதினால், நாங்களும் இருக்கிறோம் என்கிறது சூரியன். அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பெயர். ஆனால், நிலவினால் ஏற்படுகிற அலைகளைவிட, சூரிய அலைகள் சக்தி குறைந்தவை.
நிலவைவிட 27 மடங்கு சூரியன் பெரியது என்றாலும், நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறது சூரியன். அதனால், நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி, ஆற்றலில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறது என்று, தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூறுகிறது.

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
http://ranjithcronje.blogspot.qa
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்

கோலம் போடுவது ஏன்?


கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.

மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
http://ranjithcronje.blogspot.qa
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.

மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.

மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிரு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.

இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா?


 கண்கள் துடிப்பதற்கு, நமது உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்கள் உள்ளது.
http://ranjithcronje.blogspot.qa
கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்ன?

மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதால், கண்கள் அடிக்கடி துடிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.நாம் கண்கள் மூலம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை கூர்ந்து பார்ப்பது, இது போன்று நம் கண்களுக்கு அதிகப்படியான சிரம்மத்தைக் கொடுப்பதால், கண்களுக்கு அழுத்தம் அதிகமாகி அடிக்கடி துடிக்கிறது.காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை நாம் தினமும் அதிகமாக அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் அடிக்கடி துடிக்கும். எனவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.அன்றாடம் நாம் நமது உடம்பிற்கு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் மூலம் கண்களானது வறட்சியடைந்து, கண் துடிப்புகள் ஏற்படுகின்றது.நமது உடலில் ஊட்டச்சத்து மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிகமாக இருந்தால், கண்களில் உள்ள தசைகள் வலுவிழந்து அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.கண்களில் அலர்ஜிகள் ஏற்படும் போது, கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, கண்களை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கின்றது.

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?


சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது. 
http://ranjithcronje.blogspot.qa
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.
வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.
நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.
இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது

பிஸ்கட் சூடான பாலை விரைந்து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை அவ்வாறின்றி மெதுவாக உறிஞ்சுவதும் ஏன்?


அணுக்கள்
அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினால் உண்டாகும் பிணைப்பை
வேண்டர் வால் (Vander Wall’s) பிணைப்பு என்பர். பிஸ்கட்டைப் பொறுத்த 
வரையில், அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு
வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில்
தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக்
காணலாம். இதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால்
பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை
அடைந்துவிடுவதேயாகும்.
பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும்
பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும்.
பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே
குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மைhttp://ranjithcronje.blogspot.qa
அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின்
பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடான அந்நிலையில்,
சூடான பால் மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன்
காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது. இவ்விரைவுத் தன்மை ஆறிய பாலில்
இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு
நிலையில் இருப்பதேயாகும்.

பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில் (cylindrical trunk) அமைந்திருப்பது ஏன்?


மரத்தின்
தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத்
தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை. புல் வகைகளின் 
தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண
அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால்
(cells) ஆனவை;http://ranjithcronje.blogspot.qa அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு
சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். தனிப்பட்ட உயிரணுவின்
அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய
இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப்
பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன.
அவை முறையே மரவியம் (Xylem), பட்டையம் (Phloem) என்பன. மரவியம் தண்டின்
நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது
மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி
வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக
உருளை வடிவில் அமைகிறது.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்..


👉நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
http://ranjithcronje.blogspot.qa
👉கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
👉ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

தூக்கத்தில் உளறுவது ஏன்?

👇
பொதுவாக நம்மில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, யாரிடமோ பேசுவதை போல பேசிக் கொண்டிருப்பார்கள்.
இப்படி இரவில் தூங்கும் போது சிலர் தன்னை அறியாமல் பேசுவதை தான் நாம் தூக்கத்தில் உளறுதல் என்று கூறுகின்றோம்.
தூக்கத்தில் சிலர் உளறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
நம் அனைவரின் உடம்பில் தூக்கத்தின் கட்டுப்பாட்டு மையமாக நமது மூளையில் இருக்கும் முகுளப் பகுதி செயல்படுகிறது.
http://ranjithcronje.blogspot.qa
ஆனால் நமது உடம்பில் உள்ள தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளையின் தண்டுப்பகுதி ஆகிய உறுப்புகளின் ஒருங்கிணைந்த சில செயல்பாடுகளினால் தூக்கத்தின் தன்மைகள் சில சமயங்களில் மட்டும் மாறுபடுகிறது.
எனவே நாம் சில நேரங்களில் மிகவும் ஆழ்ந்து தூங்கும் போது, அந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதல்கள் மூலம் நாம் நம்மை அறியாமலே தானாகப் பேசுவதும், புலம்புவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?


விண்வெளிக்
கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா
என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு 
படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே
பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக
மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7,
------------ 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில்
ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப்
பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு
கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் http://ranjithcronje.blogspot.qa
எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை
உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச்
சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம்
தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற
இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக்
கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை
மேற்கொள்ளப்படுகிறது.

சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன் ?


சோப்பு
நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ்
என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் http://ranjithcronje.blogspot.qa
மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension)
காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன
அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும்
பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில்
ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும்
சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை
அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே
காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது
பொருந்தும்.

கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?

👇
தரைமட்டத்திற்குக்
கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில்
வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி. http://ranjithcronje.blogspot.qa
வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம்
பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில
பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு;
அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது
வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை
கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45
செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25
செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில்,
கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.

பச்சை நிறத்தில் வாந்தி ஏற்பட என்ன காரணம்?

👇
பொதுவாக நமது உடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது விஷத்தன்மை இருந்தால், அது உடனே நமது குடல் மூலமாக வெளியே தள்ளப்படும்.
இதனால் நமக்கு வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
ஆனால் வாந்தி எடுக்கும் போது, பச்சை நிறத்தில் இருந்தால், அது தீவிரமான பாதிப்பின் அறிகுறியாக இருக்க கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.
http://ranjithcronje.blogspot.qa
பச்சை நிறத்தில் எடுக்கும் வாந்திக்கு காரணம் என்ன?
நம்முடைய கல்லீரலில் தொற்றுக்களின் தாக்கம் ஏற்பட்டிருந்தால், அது வயிறு மற்றும் பைல் சுரக்கும் அமிலங்கள் அனைத்திலும் கலந்து பச்சை நிறமாகிறது. இதனால் வாந்தி பச்சை நிறத்தில் ஏற்படுகிறது.நாம் சாப்பிட்ட உணவுகள் ஜீரணம் அடையாத போது, அவை விஷத் தன்மையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த உணவுத் துகள் முழுவதும் வாந்தி வழியாக வெளியேறும் போது, அது பச்சை நிறத்தில் இருக்கிறது.நாம் சாப்பிடும் சில மருந்துக்களின் வீரியம் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் மூலம் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.மது சாப்பிட்டதும் சில வகை உணவுகளை சாப்பிடுவதால், அது ஜீரண மண்டலத்தை முழுவதும் பாதிக்கிறது. எனவே ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டைக் கெடுக்கும் விதமாக அமைவதால், பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.சிலருக்கு சப்பாத்தி, பால், கடலை போன்ற உணவுகள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத நேரத்தில் பச்சை நிறத்தில் வாந்தி ஏற்படுகிறது.இரவில் தூக்கம் இல்லாமல், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கூட பச்சை நிறத்தில் வாந்தி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வாயை திறந்துகொண்டு தூங்குபவரா ?


வாயை திறந்தவாறு தூங்கும் போது எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது.
இயற்கையாகவே எச்சிலானது, வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாகஆரம்பமாகும்.
பொதுவாக வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும்.
எனவே நேராக படுப்பதைத் தவிர்த்து, இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாயை திறந்தவாறு தூங்குவதைத் தவிர்ப்பதுடன், பற்கள் பாதிப்படைவதையும் தடுக்கலாம்

Sunday, January 1, 2017

செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்?


* செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.
* வரிசைப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள் செவ்வகவடிவில் இருந்தாலே நம் படிப்பதற்கு எளிதாக இருக்கும். நம் எடுத்து செல்வதற்கும் செவ்வக வடிவ செல்போன்கள்தான் வசதியாக இருக்கும். http://ranjithcronje.blogspot.qa
* பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது.
* செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது.

சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா?


சாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா?
பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
http://ranjithcronje.blogspot.qa
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். இது எப்படி நடக்கிறது? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.
சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது.

பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?


முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சக்தி கிடைக்கும் என்று பலரும் கூறுவார்கள் இது தவறான கருத்தாகும்.ஏனெனில் பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் http://ranjithcronje.blogspot.qa விட்டமினுடன் இணைந்து இருக்கும்.முட்டையில் உள்ள இந்த பயாட்டின் சத்துக்கள் நமது உடலின் சிறுகுடலில் சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் நமது உடம்பிற்கு முட்டையின் முழுமையான சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.நாம் முட்டையை வேகவைத்து சாப்பிட்டால், அந்த வெப்பத்தில் முட்டையில் இருக்கும் அவிடின் அழிந்துவிடுகிறது. இதனால் நமக்கு முட்டையில் உள்ள பயாட்டின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறது.முட்டையின் வெள்ளைக் கருவில் இருக்கும் அவிடின் சத்தைவிட மஞ்சள் கருவில் இருக்கும் பயாட்டின் சத்து தான் நமக்கு முக்கியம். ஏனெனில் இந்த பயாட்டின் நமது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.முட்டையை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் மூலம் நமக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்தொற்றுகள் ஏற்படுகிறது.

வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் ஆபத்து உள்ளதா?


பொதுவாக அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்கி தொழுவதற்கு, வீட்டில் நறுமணம் வீசுவதற்கும் ஊதுபத்தி ஏற்றும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகின்றது.
ஆனால் பல மலர்களின் வாசனைகள் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
http://ranjithcronje.blogspot.qa
எனவே ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஊதுபத்தியினால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்
வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நமது நுரையீரலில் அடைப்பௌ உண்டாக்கி, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுத்துகிறது.வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அழற்சிகளை ஏற்படுத்துகிறது.நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.

கண் பேசும் மொழிகள் என்னென்ன?

👇👇
ஒருவரின் கண்களை வைத்தே, அவரது மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
சிலர் கண்களை ஊடுருவியே, உண்மை மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வார்கள். இதற்கு, ஆன்மீகம், ஜோதிடம் உள்ளிட்டவற்றில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் ரீதியாகக் கண்களின் மொழி பற்றி பல உண்மைகள் ஆய்வு செய்து, நிரூபிக்கப்பட்டுள்ளன.
கண்கள் பேசும் மொழியின் விவரம் பின்வருமாறு:
1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
http://ranjithcronje.blogspot.qa
4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது.
6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.
20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

👇👇👇
பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....
தோடு :
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
http://ranjithcronje.blogspot.qa
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.
மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.
வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுத்தப்படிருகிறது.லம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன்
கொலுசு.
கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .
மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், தன் சிசு வளர உண்ண வேண்டிய உணவு முறைகள்

👇
கர்ப்பிணியாக உள்ள பெண்கள் தங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ உண்ண வேண்டிய உயிர்ச்சத்துள்ள உணவுகள்.
1. கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து)
*. பருப்பு
*. பட்டாணி
*. தானியத் தயாரிப்புகள்
*. சாக்லேட்.
2. கொழுப்புச்சத்து (மாவுப்பொருளை விட அதிகச் சத்து)
*. வைட்டமின் ‘எ’
*. வைட்டமின் ‘டி’
*. வைட்டமின் ‘இ’
*. வைட்டமின் ‘கே’
போன்ற சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.புரோட்டீன்கள்:
இது புரதச்சத்தாகும். குழந்தைகளின் திசு வளர்ச்சிக்கு புரோட்டீன்கள் என்ற புரதச்சத்து மிக பயன்படுகிறது.
4. வைட்டமின் ‘எ’:
- பச்சைக் காய்கறிகள்
- பழங்கள்
- வனஸ்பதி எண்ணெய்
- பால்
எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும், இரவில் பார்வை நன்றாகத் தெரிவதற்கும் இந்த ஊட்டச் சத்துக்கள் பயன்படுகிறது.

இரண்டு நாள் குளிக்கலைன்னா என்னாகும்?

👇
ஒருவரின் சுகாதாரம் என்பது ஒருநாளைக்கு இரண்டு முறை குளிப்பது மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும்.
சுத்தமாக இருக்கும் விஷயங்களில், ஒவ்வொருவரும் வேறு வேறு விதங்களில் இருப்பார்கள்.
ஏனெனில் சிலர் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பார்கள், சிலர் ஒரு முறை இன்னும் சிலர் சில நாட்கள் கழித்து குளிப்பார்கள்.
எனவே இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் ஆயிரக்கணக்கான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
குளிக்காமல் நாம் அன்றாடம் செய்யும் செயல்பாடுகளில், இருந்து கதவில் கைப்பிடியில் ஆரம்பித்து, குப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நம்மை அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றது.
http://ranjithcronje.blogspot.qa
குளிக்காமல் இருந்தால் நமது உடலில் பாதிப்புகள் ஏற்படுமா?
நமது உடலானது, தன்னிச்சையாக ஆண்டி-மைக்ரோபயல்களை தயாரிக்கிறது. இவை நமது உடம்பில் தீய தாக்கத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.நம் உடலில் அன்றாடம் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க நாம் தினமும் குளிக்க வேண்டும். இதனால் நமது உடலை இயற்கையான முறையில், பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து தடுத்து, வலுப்படுத்தலாம்.நமது முகத்தை தேய்த்து குளிக்கும் போது, பலரும் கண்களை சுற்றி, காதுகளின் இடுக்குகள், மூக்கு போன்ற பகுதியில் மட்டும் கவனமாக தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில் இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கப்படுகிறது.குளிர் காலங்களில், வியர்வை அதிகமாக வரவில்லை என்றால் சிலர் குளிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு இருப்பது முற்றிலும் தவறானது. ஏனெனில் உடலில் வியர்வை சுரக்க வில்லை என்றாலும் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ்களின் தாக்கத்தை எற்படுத்துகிறது.நாம் தினமும் குளிக்கவில்லை என்றால் நம்முடைய சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போல உருவாகி, சருமத்தின் நலனை கெடுக்கிறது. இதனால் சரும தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, குளிக்க முடியவில்லை என்றாலும் இதமான நீரை கொண்டு, அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் துடைத்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் இந்த இடங்களில் தான் பாக்டீரியாக்களின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.