DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, November 25, 2016

முழு உடல் பரிசோதனைகள் என்னென்ன?


நீரிழிவு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். அவருடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம், ‘‘நீயும் பரிசோதித்துக் கொள்’’ என்றார்.
“நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒரு நோயும் இருக்காது” என நண்பர் மறுத்தார். என்றாலும் சந்தேகத்துடன் வந்தவர் விடவில்லை. நண்பரைச் சம்மதிக்க வைத்துவிட்டார். இருவருக்கும் பரிசோதனை முடிந்தது. நோய் ஏதாவது இருக்குமோ என்ற பதைபதைப்புடன் வந்தவருக்கு எல்லாமே நார்மல். மாறாக, உடன் வந்த நண்பருக்கு நீரிழிவு நோய், ரத்தக் கொழுப்பு, சிறுநீரகக் கற்கள் எனப் பல பிரச்சினைகள்.

பல்லி விழுந்த பால் அல்லது உணவை உட்கொண்டால் அது விஷமாகிவிடும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?


உண்மையில்லை. பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் உலவுகிற பல்லிகளுக்குத் துளியும் விஷமில்லை. இருந்தாலும் இவற்றின் உடலில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாக்கள் இருக்கச் சாத்தியம் உண்டு. பல்லி விழுந்த உணவில் இவை கலந்து, அந்த உணவை நஞ்சாக்கிவிடலாம். அப்போது இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரிய ஒரு வாரம் ஆகும்.
பய வாந்தி
அப்படியானால், “பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே! எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள்?
இவை பெரும்பாலும் பயத்தாலும், பதற்றத்தாலும் ஏற்படுகின்றன. பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும்வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்து கிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்குப் பயம் தொற்றும்.
“ஐயோ, பல்லி விஷமாச்சே..” என்று மனம் பதறும். “உடலுக்கு ஏதாவது கேடு செய்துவிடுமோ” என்று பீதி கிளம்பும். இந்த மனரீதியிலான அழுத்தத்தின் விளைவாகத்தான் வாந்தியும் மயக்கமும் வருகின்றன. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுப்பார்கள்.
http://ranjithcronje.blogspot.qa
நேரடி அனுபவம்
இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக நான் பணிபுரிந்த காலம். ஒரு சிறுவர் பள்ளியில் மதியச் சாப்பாட்டில் பல்லி விழுந்துவிட்டதாகவும் அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுப்பதாகவும் அழைத்துவந்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்த பிறகு, ஆசிரியையிடம் விசாரித்தேன்.
“மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து, குழந்தைகள் வாந்தி எடுத்தார்கள்?” என்று கேட்டேன். “ஒரு மணி நேரம் கழித்து” என்றவர், “எல்லாக் குழந்தைகளும் உணவைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பாத்திரத்தைத் தேய்க்க வந்த ஆயாதான், பல்லி விழுந்து இறந்த செய்தியைச் சொன்னார்கள். இந்தச் செய்தி குழந்தைகளுக்கு எட்டியதும்தான் ஒவ்வொரு குழந்தையாக வாந்தி எடுக்க ஆரம்பித்தது” என்றார்.
“மதிய உணவைச் சாப்பிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் வாந்தி வந்ததா?” எனக் கேட்டேன். “இல்லை, கடைசியாகச் சாப்பிட்ட மாணவன் மட்டும் வாந்தி எடுக்கவில்லை” என்றார். “ஏன்?” எனக் கேட்டேன். “அவன் சாப்பிட்டதும் வீட்டுக்குப் போய்விட்டான். அவனுக்கு உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரியாது!” என்றார்.
அவனை வரவழைத்தேன். அதுவரை வாந்தி எடுக்காதவன் நண்பர்களைப் பார்த்ததும், தான் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்த விஷயம் தெரிந்ததும், தனக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ எனப் பயந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் வருவது எல்லாமே மனப் பிரமை என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!
பின் குறிப்பு: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட உணவை சாம்பிள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து ‘அதில் எந்தவித விஷமும் இல்லை’ என்று ரிப்போர்ட் வந்தது.
உணவைப் பாதுகாப்பாக மூடி வைத்திருக்க வேண்டியதும், வீடு, அலுவலகம் பள்ளி, விடுதி, சமையலறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் பல்லிகளின் வருகையைத் தவிர்க்க முடியும்.

ஏ.டி.எம்., வங்கி எதுவும் தேவையில்லை: இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம்


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள் வங்கி, ஏ.டி.எம்.கள் முன் தவம் கிடக்க, இதற்கு நேர் எதிராக குஜராத்தின் அகோதரா கிராமம் திகழ்கிறது.
ஏ.டி.எம்., வங்கி எதுவும் தேவையில்லை: இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம்
குஜராத்:
கடந்த 8-ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பணத்தை எடுக்க வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.கள் முன் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அகோதாரா கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் ஏ.டி.எம், வங்கி முன் சென்று பணத்தை எடுக்க காத்துக் கொண்டிருக்காமல் வழக்கம் போல தங்களது தினசரி வேலைகளைக் கவனித்து வருகின்றனர்.
இதனால் இந்த ஊரில் உள்ள ஏ.டி.எம். முன்னர் மக்கள் கூட்டத்தையும் காண முடிவதில்லை. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் இங்குள்ள சுமார் 1200 மக்களும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
http://ranjithcronje.blogspot.qa
டீக்கடை முதல் மளிகைக்கடை வரை 10 ரூபாய் என்றாலும் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தி விடுவதால் பிரதமரின் அறிவிப்பு இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மாநில அரசின் உதவியுடன் இந்த ஊரில் திறக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கிராமத்தை சேர்ந்த 1200 பேருக்கு வங்கிக்கணக்கும், ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் அக்கவுன்டும் உள்ளது.
கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியும் என்பதால், இந்த ஊரில் இருக்கும் ஒரே ஒரு ஏ.டி.எம்.-க்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்து இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அகோதரா என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் மற்றும் பிற வாலெட்டுகளில் உங்களுக்கு தெரியாத 7 வசதிகள்..!


இந்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாது என்று அறிவித்ததில் நல்ல பயனை அடைந்தது என்றால் பேடிஎம் மற்றும் ஃப்ரீசார்ஜ் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை அளிக்கும் நிறுவனங்கள் என்று கூறலாம்.
இந்த இ-வாலெட்டுகள் பணவரித்த்னை தவிரப் பல சேவைகளை வழங்கி வருகின்றன.
பேடிஎம் மற்றும் பிற வாலெட்டுகளில் நீங்கள் எந்தச் சேவைகள் எல்லாம் பெற இயலும் என்று இங்குப் பார்ப்போம்.
உடனடியாக பரிவத்தனையை ஏற்கலாம்
நீங்கள் சிறியதாக ஒரு வணிகத்தை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கார்டு ஸ்கானர், கணினி போன்று எந்தச் சாதனமும் இல்லாமல் மொபைல் போனைப் பயன்படுத்தி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
டிஜிட்டல் வாலெட்டுகளில் உங்கள் மொபைல் என்னைப் பதிவு செய்து கொண்டு பணவரித்தனைகான குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் போனில் வாலெட்டுகளின் செயலியைப் பதிவிறக்கம் செய்து இருந்தால் போதும் பணத்தை எளிதாக அனுப்பிவிடலாம்.
நீங்கள் பணம் செலுத்த வேண்டிய வணிகரின் கணக்கு விவரங்களை உள்ளிட்டு பணத்தை அனுப்பவும் என்ற தெரிவை தேர்வு செய்வதன் மூலமாக எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய இயலும். இதற்கு உடனடியாக வணிகர்கள் அலர்ட் செய்திகளைப் பெறுவர்.
பேமெண்ட் வங்கி சேவை
மிகப் பிரபலமான பேடிஎம் டிஜிட்டல் வாலெட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பேமெண்ட் வங்கி சேவைக்காக உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேமெண்ட் வங்கி சேவையில் எந்த ஒரு ஆவணமும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்காமல் 10,000 ரூபாய் வரை பணப்பரிவத்தனை செய்துகொள்ளலாம். இதுவே உங்கள் அடையாள சான்றுகள் போன்றவற்றைச் சமர்ப்பிக்கும் போது பரிவர்த்தனையின் அளவு அதிகரிக்கப்படும்.
மேலும் விரைவில் டிஜிட்டல் கிரெடிட், டெபிட் கார்டுகள், சேமிப்பு கணக்குகள் போன்ற சேவையை பெற்று பயன்பெற இயலும்.
வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்துதல்
டிஜிட்டல் முறையில் உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் பெறும் பணத்தை எளிதாக உங்கள் வங்கி கணக்குகளுக்கும் இந்த வாலெட்டுகள் மூலம் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு 1 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.
புதிய பேடிஎம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது 3 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
http://ranjithcronje.blogspot.qa
வாலெட்ஸ் ஆன் டெலிவரி
வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையில் பலர் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வங்குவதை குறைத்துக் கொண்டு இணையதளம் மூலமாக வங்கி வருகின்றனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்தும் கேஷ் ஆன் டெலிவரி சேவையை இப்போது அனைவரும் நிருத்தி உள்ள நிலையில் வாலெட்டுகள் ஆன் டெலிவரி சேவையை பயன்படுத்தத் துவங்கலாம்.

வீட்டின் மூலையில் எலுமிச்சை பழம் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?


எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.
வீட்டில் எலுமிச்சை பழத்தினை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க வைக்கிறது.
எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது. இதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.
நம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால், அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.
http://ranjithcronje.blogspot.qa
எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
எலுமிச்சை தோலை வைத்து முழங்கை, முழங்கால் பகுதிகளில் தேய்த்துக் குளிப்பதால், முழுமையாக சுத்தத்தை தருகிறது. மேலும், கருவளையம், பருக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

யூபிஐ செயலி என்றால் என்ன..? மக்களுக்கு இதனால் என்ன பயன்?

👇
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன்(NPCI) யூனிபைட் கொடுப்பனவு இடைமுகம் (UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யூபிஐ என்பது செயலி மூலம் வங்கி பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதி ஆகும்.
எனவே நாம் யூபிஐ என்றால் என்ன மற்றும் இதன் மூலம் நாம் என்ன வங்கி சேவை எல்லாம் செய்ய இயலும் என்பதைப் பற்றி இங்குப் பார்ப்போம்?
யூபிஐ என்பது ஒரு பண பரிமாற்ற சேவை, இதன் வாயிலாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம்.
யூபிஐ வழியாக ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஐஎஃப்எஸ்சி குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவும் இல்லாமல் பண பரிவர்தனை செய்ய இயலும்.
ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாரதிய மகிளா வங்கி, கனரா வங்கி, கத்தோலிக்க சிரிய வங்கி, டிசிபி (DCB)வங்கி, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிஜேஎஸ்பி ஷாகாரி வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், கர்நாடகா வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் யெஸ் பேங்க் என 19 வங்கிகளும் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளன.
http://ranjithcronje.blogspot.qa
1. ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாாட்போன் வைத்திருக்க வேண்டும்.
2. பின்பு ப்ளேஸ்டோரிலிருந்து உங்கள் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாாட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. யுபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை உருவக்க வேண்டும்
4. இப்போது யுபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
5. பின் தனி அடையாளக் குறி (எம்-பின்) உருவாக்க வேண்டும்.
6. இதன் பிறகு யுபிஐ செயலி பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலை அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும்.
வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம்.
ஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம்.
ஏதேனும் பொருள் அல்லது சேவையை பெறும் போது வணிகர்களின் பயனர் குறியீட்டைப் பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்க செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பணத்தை செலுத்தவும் என்ற தெரிவை தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை எளிதாகச் செலுத்தலாம்.

அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?


அசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம் !
– அசல் தேனை நாய் நக்காது !
– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது !
– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் !
– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது
– நெருப்பில் எரியாது
போன்றவை பிரபலமானவையாகும்..
ஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.
http://ranjithcronje.blogspot.qa
பல நேரங்களில் கலப்படத்தேனும் இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.
எனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் ?
எனவே, சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது ஒரு சில வழிமுறைகளை கையாண்டால் ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.
– நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம்.
– இந்தியாவை பொறுத்தவரை “அக்மார்க்” சின்னம் பொதித்த உணவுப்பொருட்களின் தரம் பரிசோதித்து பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. எனவே அக்மார்க் முத்திரையிடன் கூடிய தேன் மற்றவற்றை விட அதிக தரத்துடன் இருக்கும் என்பதை நம்பலாம். மேலும் அக்மார்க் முத்திரையுடன் கூடிய தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடும் பெறலாம் என்பது கூடுதல் அனுகூலமாகும்.

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்ன


அறிவியல் என்ன கூறுகிறது?
எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும். ஆரோக்கியம்! இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
http://ranjithcronje.blogspot.qa
என்ன லாஜிக் இது?
சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள். வேறு கருவிகள்! இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

வாழை இலையின் பயன்கள்


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி
காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை
சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு
மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை


நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்- சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும்.
பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அத்தகைய மருந்துகளால் அவர்களுக்கு நோய் குறைந்ததுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடல் மெல்ல மெல்ல ஆரோக்கிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும்.
டாக்டரின் பரிந்துரை இல்லாத மருந்துகளை சுயமாக வாங்கி தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். டாக்டர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து சரியான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவே முழு பலனைத்தரும்.
உலக நாடுகள் சிலவற்றில் டாக்டரின் பரிந்துரையின்றி சிலவகை மருந்துகளை மட்டும் சுயமாகவே மெடிக்கல் ஷாப் நடத்துபவர்கள் விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. நம் நாட்டில் ஏராளமான வகை மருந்துகளை அவ்வாறு வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பஸ்களில் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செல்வது போல், ரயிலில் செய்ய முடியாதது ஏன்


நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம். ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்... தியேட்டரும் - ரயில் வண்டியும்! நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம். ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. கோச்! பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும். டிக்கெட் புக் ஆகும் முறை! நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு http://ranjithcronje.blogspot.qa செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும். புவியீர்ப்பு மையம்! ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. கடைசி நேரத்தில்... கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுத்து இருக்காய் கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம். சற்று யோசியுங்கள்! நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது.

உங்களுக்கு முதுகு, கால் போன்ற இடங்களில் பல நாட்களாக வலி தாங்க முடியவில்லையா?


நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலரும் முதுகு, கால் போன்ற பகுதிகளில் கடுமையான வலியை சந்திக்கின்றனர். இப்படி பல நாட்கள் தாங்க முடியாத வலியை அனுபவிப்பதால் பலரும் எங்கு தினமும் மாத்திரைகளை எடுக்க வேண்டி வந்துவிடுமோ என்று நினைத்து அஞ்சுகின்றனர். ஆனால், இப்பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு தரக்கூடிய ஓர் அற்புதமான இயற்கை மருந்து உள்ளது. இதனை தொடர்ந்து ஒருவர் சாப்பிட்டு வந்தால், முதுகு, கால் வலிக்கு விரைவில் நிரந்தர தீர்வைக் காணலாம்.
வலியைப் போக்கும் பொருட்கள்:
உலர்ந்த அத்திப்பழம் - 1 உலர்ந்த ஆப்ரிக்காட் - 1 உலர்ந்த முந்திரிப்பழம் - 5
திசுக்கள் மீளுருவாக்கம் இந்த மூன்று உலர் பழங்களிலும் உள்ள உட்பொருட்கள், திசுக்களின் மீளுருவாக்கத்தை தூண்டி, முள்ளெலும்புகளுக்கிடையான டிஸ்க்குகளை இணைத்து வலியைக் குறைக்கும்.
http://ranjithcronje.blogspot.qa
எப்போது சாப்பிட வேண்டும்?
இந்த மூன்று பழங்களையும் தினமும் இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால்சில நாட்களிலேயே முதுகு மற்றும் கால் வலி குறைந்திருப்பதைக் காணலாம்.
எவ்வளவு காலம் சாப்பிட வேண்டும்?
இந்த சிகிச்சையை ஒருவர் இரண்டு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், முதுகு, கால்களில் உள்ள வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைத்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் மீண்டும் இந்த வலி வராமல் இருப்பதையும் காண்பீர்கள்.

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்


நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால், அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, உமிழ்நீர், உணவில் கவனம் ஆகியவை தான்.
http://ranjithcronje.blogspot.qa
பசி தான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்தப் பசி தான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்கச் செய்ய தயார் என்று கூறும் குறிப்பாகும். பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.

தொண்டையை பாதுகாக்க



1.பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல் போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம்.
உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.