DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, November 30, 2012

ஜெராக்ஸ் உருவானது எப்படி?


உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனிதவாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ்இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனிமனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில்செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில்அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின்வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவிநடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும்சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின்நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமானஇரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து  ஒன்றுடன்ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால்நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும்

காலண்டர் தோன்றிய விதம்



கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் கலண்டேஎனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல்.புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு.45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.

இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படிஅலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. 

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. 

துணி விற்பனை செய்தல்


நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் தேவையாக இருப்பது துணிகள். தேவை மிகுதியாக இருப்பதால் துணி விற்பனை தொழிலுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.
நேரம்!
அலுவலக வேலையோ, சுய தொழிலோ எதைச் செய்தாலும் நீங்கள் இந்த தொழிலைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 மணி நேரம் செலவழித்தால் போதும். அதற்குமேல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
முதலீடு!
குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தொடங்கி, உங்கள் முதலீட்டு வசதிக்கேற்ப இத்தொழிலைத் தொடங்கலாம். காலப் போக்கில் தொழில் வளர்ச்சிக்கேற்ப முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம்.
வருமானம்!
எல்லா செலவுகளும் போக 10 முதல் 20 சதவிகித லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.
கவனம்!
தரமான துணிகளை, குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்க வேண்டும். கலர், டிசைன் போன்றவற்றை கஸ்டமர்கள் விரும்புகிற மாதிரி தேர்வு செய்ய வேண்டும். கஸ்டமர்கள் தவணை முறையில் கேட்டால், கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பாசிட்டிவ்!
அடிப்படைத் தேவை என்பதால் மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். கெட்டுப் போகாத சரக்கு என்பதால் சில மாதங்களுக்கு வைத்துகூட விற்கலாம்.

சளித்தொல்லைக்கு மருந்து




பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது. 
அந்நாட்களில் நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். 
பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. 

முகப்பருவை சரி செய்ய

கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும் அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப் போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
டீ பேக் பேஸ்ட்
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன் சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை கை, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி 15 நிமிடம் காயவைக்கவும். உலர்ந்து இறுக்கமான பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். பயன்படுத்திய `டீ பேக்கை’ கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், சூட்டினால் ஏற்படும் கண் சோர்வு, எரிச்சல் நீங்கும்.
அதேபோல் கிரீன் டீ முகப்பருவைப் போக்கும் சிறந்த மருத்துவப் பொருளாக செயல்படுகிறது. இதில் உள்ள பென்சாயில் பெராக்ஸைடு முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கும். வறட்சி ஏற்படவிடாது. சருமத்தை பருவின்றி பொலிவாக்கும்.

Wednesday, November 28, 2012

உங்கள் ANTI VIRUS வேலை செய்யுதா என நீங்கள் சோதனை செய்ய

இணையம் மற்றும் சாதாரணமாக கணினிஉபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை
இந்த வைரஸ் (virus).நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update
செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில்
புகுந்து விடும்.நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை
செய்கிறதா இல்லையா என்று எப்படிகண்டு பிடிப்பது .கீழே உள்ள code( நீல
நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என
save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த
கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால்
உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்

ரகசிய தகவல்களை அனுப்புவது எப்படி?

நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை
மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு
அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத்
தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை
மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.
இந்த வசதியை https://oneshar.es/ என்னும் தளம் நமக்கு தருகிறது.
அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு உங்கள் ரகசிய செய்திகளை கொடுத்து Create Link என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு உங்களுக்கென்று ஒரு சுட்டி (URL) கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக்
செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த
சுட்டியை அனுப்புங்கள்.
அந்த சுட்டியை அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும்.
இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த சுட்டியை க்ளிக்
செய்தால் அந்த செய்தி இருக்காது.

பேஸ்புக்கில் குறிபிட்ட ஒருவரின் அனைத்து போஸ்ட்களை ஓரிடத்தில் பார்க்கும் வசதி

இணைய உலகில் இன்று சமூக வலைதளங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணையதளத்தில் இருவர் பேசிக்கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனால் இன்று நிலமை வேறு. பெரும்பான்மையோர் சமூக இணையதளங்களே தஞ்சமென்று கிடக்கின்றனர்.
    சமூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணையதளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்துவதற்காகதான் என்றாகிவிட்டது. சிலர் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம் :)
    சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன், வேலைக்கு விண்ணப்பித்தவரை பற்றி உண்மையாக, முழுமையாக தெரிந்துகொள்ளும் நோக்கில் அவரின் பேஸ்புக் புரொபைலை பார்க்கின்றனர். இப்பொழுதெல்லாம் பெண்ணுக்கு மாப்பிளை
/மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போதுகூட சிலர் இதையே பின்பற்றுகின்றனர். 
    இப்படி குறிப்பிட்ட ஒருவரின் போஸ்ட்களை அவரின் புரொபைலில் சென்று தேடிப்பிடித்து படிப்பது சற்று சிரமமாகவே இருந்துவந்தது. அந்த சிரமத்தை போக்க வந்துள்ள இணையதளமே FB TIME MACHINE. இதன் இணையதள முகவரிhttp://fbtimemachine.appspot.com
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணையதளத்திற்கு சென்று, உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து கொள்ள வேண்டும். திறந்த பின்பு எந்த நண்பரின் அனைத்து பதிவுகளையும் படிக்கவேண்டுமோ, அவரின் பெயரை குறிப்பிடவும். உடனே அவரின் “அனைத்து” பதிவுகளையும் காட்டும். இது பேஸ்புக் பிரியர்களுக்கும், பேஸ்புக் பயன்படுத்தும் “குறிப்பிட்ட ஒருவரை” பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கும் பயன்படும் ஒரு இணையதளம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Monday, November 26, 2012

திருமணப் பதிவுச் சட்டம்


தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.
எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

கல்விக்கடன் பற்றிய தகவல்


ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான்.
ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம்.
இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இத்தொடர்…
மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது.

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

எவ்வளவு பெரிய வீட்டை கட்டினாலும் அதற்கு பாதுகாப்பு ஒரு சின்ன பூட்டு தான். இப்போது தொழில்நுட்ப திறமை வாய்ந்த திருடர்கள் பெருகியுள்ள காலத்தில் திண்டுக்கல் பூட்டை நம்பி எல்லாம் நாள் கணக்கில் வீட்டை பூட்ட முடியாது. தற்போது கதவுகளுக்கான நவீன பூட்டுக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. சிலிண்டரிக்கல் டோர் லாக், எலக்ட்ரோ மேக்னடிக் லாக், பேனல் லாக், அல்ட்ரா பர்னிச்சர் லாக் என ஏகப்பட்ட வகைகளில் பூட்டுகள் வந்து விட்டன. அந்த காலத்தில் தொங்கும் பூட்டுகளில் ஒரு லாக் மட்டுமே இருக்கும். 
ஆனால் இந்த கால பூட்டுக்களில் இரண்டு, மூன்று லாக் அடுத்தடுத்து இடம் பெறுகிறது. அலுமினியம், மெட்டல், கோல்டு கோட்டிங் பூட்டுக்கள் விற்பனையாகிறது. தேக்கு மர கதவில் 5 இன்ச் ஆழத்திற்கு துளையிட்டு லாக் பிட்டிங் செய்கிறார்கள். இந்த பிட்டிங்கை தனியாக கழற்றி எடுக்க முடியாது. மெயின் கதவுக்கான கைப்பிடியுடன் கூடிய பூட்டு (செட்டாக) ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், படுக்கை அறை, உள் அறைகளுக்கான கைப்பிடி பூட்டுக்கள் 500 ரூபாய் அளவில் இருந்தும் விற்பனையாகிறது. 
பிங்கர் பிரின்ட் பூட்டுகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இந்த வகை பூட்டுகள் வங்கி லாக்கர், ரகசிய அறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. யார் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர் மட்டுமே அந்த பூட்டை திறக்க முடியும். இல்லாவிட்டால் ரகசிய எண்ணை பதிவு செய்தும் பூட்டை திறக்கலாம். இந்த வகை பூட்டுக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனையாகிறது.

அனைத்து நாடுகளின் ஊரின் நேரம் மற்றும்அட்சரேகை,தீர்க்கரேகை அறிய

உலகின் எந்த மூலையிலும் உள்ள ஊர்களின் அப்போதைய நேரம், உலக வரை படத்தில் அதன் இடம், அந்த ஊரின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை, எந்த நாடு என அனைத்து தகவல்களையும் மிகக் குறைந்த நேரத்தில் காட்டும் இணைய தளம் . http://worldtimeengine.com/about என்ற முகவரியில் உள்ள தளம் தரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன.
ஒரே நேரத்தில் நீங்கள் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்ற ஊரின் நேரத்தை அறியலாம்.எடுத்துக் காட்டாக சென்னை,லண்டன்,மாஸ்கோ (Chennai and London and Moscow) எனக் கொடுத்து நேரம் அறிய எணி என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே இந்த மூன்று ஊர்களின் சாட்டலைட் படம் மேப்பாகக் காட்டப்படுகிறது. நீங்கள் கேட்கும் ஊரின் மேலாக அடையாளம் காட்டப்படுகிறது. படத்திற்கு மேலாக ஊர் பெயர், ஊர் உள்ள நாடு, அது காலையா அல்லது மாலையா, இரவா எனக் காட்டி அப்போதைய நேரம், கிழமை மற்றும் தேதி காட்டப்படுகிறது. கீழாக சாட்டலைட் மேப் தரப்படுகிறது. மேப்பில் அந்த ஊரின் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் சீதோஷ்ண நிலை காட்டப்படுகிறது. வழக்கம்போல் கூகுள் மேப்பில் ஸூம் செய்வது போல இதனையும் ஸூம் செய்து காணலாம். மூன்று வகை மேப்பினையும் காணலாம்.

Sunday, November 25, 2012

உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப


மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.
பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணைய தளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலி லிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன், எல்.ஜி, மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது. பிளாக்பெர்ரி, ஐ-போன், ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷன் மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது. இதன் ஒரே குறை 80  எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

பயனுள்ள இணையதளங்கள்


  • http://worldtimeengine.com/ (நீங்கள் உலகத்தில் எந்த  மூலையில் இரு ந்தாலும் இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பிய நாட்டின் நேரத்தையும் அதனுடைய நில வரைபடத்தையும் பார்த்துக்கொள்ளலாம்).
  • http://www.yahind.com/ (வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்த தளத்தில் பல நல்ல தகவல்கள் கிடைக்கும்
  • http://www.indiapost.gov.in இந்த தளதில் இந்தியாவின் போஸ்டல் கோடு விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்
  • http://www.bhashaindia.com/ இந்த தளதில் கிடைக்கும் இலவச மென்பொருள்களின் மூலம் உங்களுக்கு சொந்தமான WindowsXP, Microsoft Office 2007 and 2003 பொன்றவற்றை தமிழ் மொழியில் மாற்றிக்கொள்ளலாம்.
  • http://www.typingweb.com ஆன் லைன் டைப்பின் டுடேரியல் - இந்த இனைய தளத்தின் உதவியோடு நீங்கள் டைப் செய்ய பழகிக்கொள்ளலாம்
  •    http://technology.desktopnexus.com சிறந்த கம்ப்யூட்டர் படங்கள் Computer Wallpapers இந்த தளத்தில் கிடைக்கும்

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள்,நாட்கள்,நொடிகள் ஆகிறது என அறிய


நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் , நாட்கள் ,நிமிடங்கள் ,நொடிகள் ஆகிறது என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா .. எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம் ... இதில் உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொடுத்தால் உடனே உங்களுடைய வயது, கிழமை , நாட்கள் என அனைத்தையும் காட்டுகிறது.



Age Calculator
Month :
Day :
Year :

உங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய



  • கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்படும்.(very slow on computer speed) 
  • கணிப்பொறி அடிக்கடி செயலிழந்து போகும். (computer failure )
  • கணிப்பொறி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart)
  • கணிப்பொறியில் இருக்கும் பயன்பாடுகள்(computer applications) சரிவர இயங்காது 
  • வட்டுகளையும், வட்டு இயக்கிகளையும் பயன்படுத்த முடியாது.(Disks, disk drives will not be able to use.) 
  • அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.)
  • அடிக்கடி தேவையில்லாத பிழைச் செய்திகள்(Error Message) தோன்றும். 
  • அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Double extension)தோன்றலாம். 
  • எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி(Anti virus software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும். 
  • நீங்கள் தோற்றுவிக்காத புதிய பணிக்குறிகள்(Short Cuts) திரைமுகப்பில் காணப்படும். 
  • தேவையில்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும். 
  • உங்கள் கணிப்பொறியிலுள்ள முக்கியமான நிரல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.(Important files are removed without your permission) 
  • எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும். (The computer's memory Reduced   without any reason )
  • வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.(Strange news appear on screen) 
  • வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும்.(Strange files are in folders) 
  • உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும். (Unbeknownst to you, some of your files will be copied.)

மேற்கண்ட அறிகுறிகள் உங்களுடைய கணினியில் இருக்குமானால் நிச்சயம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள

இப்போதெல்லாம் இணைய இணைப்பை வழங்க எத்தனையோ தனியார் நிறுவங்கள் வந்துவிட்டது. நாள்தோறும் புதிய வசதிகளுடனும், புதிய தொழில்நுட்பத்தையும் தனது தயாரிப்பில்(Pocket internet modem)வெளியிடுகின்றனர். Aircel, Air tel  Reliance, MTS, Tata Indicom இப்படி நிறைய இருக்கிறது.

அரசு நிறுவனமான BSNL-கூட இத்தகைய மோடங்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதில் குறைந்த செலவில் அதிக வேகம் உடையது BSNL மட்டும்தான்.

உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட் எவ்வளவு என்று உடனடியாக உங்களுக்குத் தெரியவேண்டுமா?
இதற்கென்றே இந்த தளம் உள்ளது. ஒரே நொடியில் உங்களுடைய இணைய வேகத்தை துல்லியமாக அளவிட்டு சொல்லிவிடுகிறது.

தளத்தின் பெயர் இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட் (Internetspeedtest)
  • இதில் நீங்கள் எந்த ஒரு கணக்கையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை..
  • இதில் நுழைந்தவுடனேயே தளத்தில் கீழாக உங்களுக்கு Test Your Speed என்ற பட்டன் இருக்கும். 
  • அந்த பட்டனை கிளிக் செய்தாலே போதும்.
  •  உடனடியாக உங்கள் இணையவேகத்தை கண்டறிந்து கீழே இதுபோல காட்டும்.   
இது மிக குறைந்த வேகம். உங்களுடைய இணைய வேகம் எப்படி இருக்கிறது என்பதை இங்குசொடுக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

Friday, November 23, 2012

செடிகள் செழிப்பாக வளர வேண்டுமா?


வீட்டில் ஆசைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கும் செடிகள் நன்கு செழிப்பாப வளர வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முயற்சி என்றதும் உடனே கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம் என்று தானே நினைத்திருப்பீர்கள். ஆனால் அவ்வாறு கெமிக்கல் கலந்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதை விட, ஈஸியான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களிலேயே செடிகளுக்கு ஏற்ற உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் இருக்கின்றன. அது என்னென்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தோட்டத்தில் இருக்கும் செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்...
செடிகள் செழிப்பாக வளர...
1. வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின் அந்த தண்ணீரை தோட்டத்தில் உள்ள பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் அழிந்துவிடும். இதனால் செடிகளானது எந்த ஒரு பூச்சிகளாலும் தாக்கப்படாமல் இருக்கும்

வெளவால்களின் விஞ்ஞான உண்மைகள்


மிக அழகாகப் பறந்தாலும், வெளவால் பறவை இனம் கிடையாது. இதற்கு இருப்பது இறக்கைகள் அல்ல, அதன் விரல்களின் நுனியிலிருந்து உடலோடு சேர்ந்து விரிந்திருக்கும் மெல்லிய தோலின் பகுதிதான். இதை மெம்ப்ரேன் என்பார்கள். இதில் பறவைகளுக்கு இருப்பது போல் ஓர் இறகுகூடக் கிடையாது என்பது இன்னொரு வித்தியாசம்.
வெளவால்களுக்குப் பறவைகளைப் போன்ற அலகுகள் கிடையாது. எலிக்கு இருப்பது போன்ற வாயும் பற்களும்தான். கிட்டத்தட்ட ‘பறக்கும் எலி’ என்றுகூட வெளவால்களைச் சொல்லலாம்.
உலகின் குளிர்ப் பகுதிகளிலும் சில தனிமையான தீவுகளையும் தவிர, எல்லா இடங்களிலும் வெளவால்கள் உண்டு. வெளவால்களில் மொத்தம் 951 வகை உண்டு. இவை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ்


நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தாலே எந்த ஆபத்தையும் தவிர்த்துவிடலாம். இங்கே பல்வேறு சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கவனமாகப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். உன் நண்பர்களுக்கும் சொல்லவும்.
நடந்து செல்லும்போது
இரண்டுபுறமும் பார்த்துவிட்டுத்தான் சாலையைக் கடக்க வேண்டும்.
‘ஸீப்ரா கிராஸிங்’ எனப் படும்கறுப்பு|வெள்ளைக் கோடுகள்உள்ள இடத்தில்தான் சாலையைக் கடக்க வேண்டும். றீ போக்குவரத்துக் காவலரோ, பாதசாரிகளுக்கான பச்சை விளக்கோ அனுமதித்த பின்தான் சாலையைக் கடக்க வேண்டும்.
சுரங்கப்பாதைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதே பாதுகாப்பு.

கணினியில் பிரச்சனைத் தீர்க்கும் மென்பொருள்

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்: 

1. Windows Explorer, 2. Internet Connection Problem, 3. Media Player, 4. Explorer.exe Problem, 5. Recycle Bin, 6. Disk Drive Problem, 7. Auto Run Problem 

கூடவே சில செட்டிங்ஸ்(Settings Problems) பிரச்சனைகளும் வரும். இதுபோன்று 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும். 

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது இச்சிறிய மென்பொருள்.

இந்த இணைப்பிலிருக்கும் மென்பொருளைத் தரவிறக்கம் மேற்கொண்டு, மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கு சொடுக்குங்கள்:http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

175kb குறைந்த அளவுகொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.. சிறிய சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் மற்றவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது

தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE ]

இன்று இணையத்தில் சில தகவல்களை  தேடும் போது நாம் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு இணையதளத்தினை பற்றி பார்க்க நேரிட்டது. அது ஒவ்வொரு நாட்டினரும் உயிராக மதிக்கும் தேசிய கீதத்தை பற்றிய இணைய தளமாகும். இத்தளமானது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே இப்பதிவின் மூலம் அறியாதவர்களுக்கு அறியும் வண்ணம் தெரிவிக்கின்றேன்.

இணைய முகவரி :   http://www.nationalanthems.info/in.htm