DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, October 14, 2012

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு






திருமணம் என்றாலே குழந்தைப்பேறு என்பது கட்டாயம் என்றாகி விட்டது. குழந்தைப்பேறு மிகவும் முக்கியம்தான். திருமணம் என்ற அமைப்பு முறையில் குழந்தைப்பேறு ஒரு அங்கம் என்றுதான் கருத வேண்டும். ஆனால் குழந்தை பேறின்மையால் திருமண முறிவுகள் நடக்கின்றன. அது தவறு. திருமணம் என்பதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

நவீன அறிவியல் யுகத்தில், கரு முட்டை தானம், உயிரணு தானம், கருதானம், வாடகைத் தாய் முறை போன்றவற்றால் இந்த உலகில் ஆண், பெண் யாருக்குமே குழந்தை இல்லை என்ற பிரச்சினையே இல்லாமல் செய்து விட முடியும். அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் ஏராளமாக உள்ளன.
பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு, கருப்பை சுகப்படலம், கருக்குழாய் அடைப்பு, கரு முட்டைப் பை நீர்க்கட்டிகள், கருப்பை திசுக்கட்டிகள் போன்றவைகள் காரணமாகின்றன. இன்றைய சிகிச்சை முறைகளில் இவை அனைத்துக்குமே நல்ல தீர்வு உண்டு.
சமீப காலத்தில் கரு முட்டைப்பையிலிருந்து ஒரு பகுதி திசுவை எடுத்து உறைநிலைப்படுத்தி பிறகு அதனை மாற்றுவதன் மூலம் குழந்தைப்பேற்றை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு நவீன கண்டுபிடிப்பாகும். மருத்துவ உதவியின் மூலம் உண்டாகும் கருவை உறை நிலையில் வைத்து சிகிச்சை மூலம் கரு உண்டாக்குதால் தற்போது நிரூபிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்றாகி விட்டது.
உலக அளவில் பெருகி வரும் சோதனைக்குழாய் குழந்தைக்கான மருத்துவ மையங்கள் மீதமாகும் கருக்களை உறை நிலையில் வைத்து பிற்காலத்தில் உபயோகிக்கின்றன. உறை நிலை கருக்கள் பலமுறை கருமாற்றி சிகிச்சைக்கு உதவுகின்றன. இதற்கு ஒரே முறை நடக்கும் கருமுட்டை எடுக்கும் சிகிச்சையே போதுமானது. மேலும் இந்த செய்முறையில் உண்டாகும் குழந்தைகள், இயற்கையில் பிறந்த குழந்தைகளுக்கு சமமாக உள்ளன.
உறைநிலையில் கருக்களை வைத்திருப்பதின் நன்மைகள்:……
சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சையில் கரு கூடுவதற்கான சாத்தியங்களையும், மீதமிருக்கும் கருக்கள் சேதமாகமால் இருக்கும் சாத்தியத்தையும் உறைநிலை கருக்கள் அதிகப்படுத்துகிறது. சில மருத்துவ சிகிச்சை மையங்களில் உறை நிலை கருக்கள், புது கருக்களை விட அதிக அளவில் கரு கூடுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கி இருக்கிறது.
கரு முட்டையை அதிக அளவில் தூண்டப்படும் நோய் அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு இந்த சோதனைக் குழாய் குழந்தை முறையில் மேலே சொல்லப்பட்ட உறை நிலை கருக்கள் பாதி பதிய வைக்கும் முறை பெரிதும் பயன் தருகிறது. கருக்கள் பதிய வைக்கும்போது, கருப்பை சுவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கருப்பை சரியாக வளர்ச்சியடையாமல் இருந்தாலோ, அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.
மேலும் புதிய கரு பதிய வைப்பதில் சிக்கல்கள் நேரிடலாம். உதாரணம் கருப்பை வாய் தழும்புகளோடோ, குறுகலாகவோ இருப்பதால் அதன் வழியாக செலுத்துவது சிரமம். உறைய வைக்கப்படும் எல்லா கருக்களும் உயிர் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நல்ல முறையில் உறைய வைக்கும் முறை மூலமாக 50 முதல் 55 சதவீதம் கருக்கள் உயிர் பிடிக்கக்கூடும்.
கரு சேதமடை தல் அதனை உறைய வைப்பதால் மட்டுமல்ல குளிர்பதனக் குறைவாலும் நிலைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாலும் ஏற்படலாம். உறை நிலை கருக்களை பயன்படுத்துவது என்பது புதிய கருக்களை பயன்படுத்துவதை விட அதிக பலனைத் தருகிறது என்பது பெரும்பாலான சோதனைக்குழாய் குழந்தை உருவாக்கும் மருத்துவ மையங்களின் அனுபவமாகும்.
மேலும் ஒரே கருத்தரிப்பில் பல குழந்தைகள, உருவாவதைவும் தடுக்க முடிகிறது. மேலும் கருவில் உண்டான குழந்தைகளின் கருச் சிதைவை குறைக்கிறது. சோதனைக்குழாய் குழந்தை வெற்றியால் பல காரணிகள் உள்ளன. பெண்ணின் வயது, பதிய வைக்கப்படும் கருக்களின் எண்ணிக்கை மற்றும் உறைய வைத்து பயன்படுத்தும் முறை போன்றவைகள் வெற்றியை தீர்மானிக்கின்றன.
உறைநிலை கருக்களை கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு ஏதேனும் பிறவிக்குறைபாடுகள் வந்ததாக இதுவரை தகவல் இல்லை. மேலும் இந்த புத்தம் புதிய தொழில்நுட்பம் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கும் வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். இதுபோன்ற நவீன கண்டுபிடிப்பு சாத்தியங்களை முன்னிட்டும், சமூக பொருளாதார காரணங்களை முன்னிட்டும் பெண்கள் கருவுறுதலை தள்ளிப்போடக்கூடாது.
30 வயதுக் குள் கருவுறும் பெண்ணுக்கு பிரச்சினைகள் குறைவு. 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு கருமுட்டை அழியக் கூடிய வாய்ப்புகள் அதிகம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கருவுறுதலை தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் தங்களது கருமுட்டையை முன்கூட்டியே உறைநிலைப்படுத்தும் முறைப்படி உறை நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
பிற்காலத்தில் வசதிக்கு தக்கப்படி கருவுற்றுக் கொள்ளலாம். சர்வதேச கருவுறுதல் மாநாட்டில் ஒரு விஞ்ஞானி தெரிவித்தது ஆச்சரியப்படத்தக்கதாக இருந்தது. உருவ ஒற்றுமை இருக்கும் இரட்டையரில் ஒருவருக்கு மற்றவரின் சின்ன முட்டைப் பையை டிரான்ஸ்பிளான்ட் செய்து அதன் மூலம் இயற்கையாகவே கருவுறுதல் நடைபெற வைத்து சாதித்திருக்கிறார்கள்.
எனவே குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சினையே இல்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிராமல் முறையான சிகிச்சையை சரியான சமயத்தில், சரியான மருத்துவரிடம் மேற்கொண்டால் திருமணத்தின் ஒரு அங்கமான குழந்தைப்பேறு என்பது சாத்தியமாகும். பெண்களுக்கு உயர்வு செய்யவும், பெண்களை மதிக்கவும், நவீன அறிவியல் காட்டும் தெளிவான வழியை பின்பற்றுவோம். திருமண அமைப்பு முறையை காப்பாற்றுவோம்.


No comments:

Post a Comment