பாலில் கொழுப்புச் சத்து இருப்பது தெரிந்த தகவல்தான். அந்தப் பாலை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள கொழுப்புப் பொருட்கள் எல்லாம் ஒன்றாகச் சேரத் தொடங்கிடுது. அப்போ அது அப்படியே பாலின் மேல் மிதக்க ஆரம்பிச்சிடுது. அதே நேரம் பாலில் உள்ள நீரும் கொதிக்கத் தொடங்கி ஆவியா மாறுது. இந்த நீராவி பாலின் மேல் படிந்து இருக்கும், தனது பாதையை அடைத்துக் கொண்டு இருக்கிற பாலாடையை தூக்கிவிட்டு, வெளியே போக முயற்சி பண்ணுது. இதைத்தான் பால் பொங்குதுனு சொல்றோம். பால் காய்ச்சின உடனே, அதை ஆற வைக்கும் போது, பால் மேல இருக்கிற இந்த கொழுப்புப் பொருளைத்தான் நாம் பாலாடைன்னு சொல்லுகிறோம்.
No comments:
Post a Comment