மலருக்கு வாசனை அதன் இதழ்களில் இருக்கும் சில எண்ணெய்ச் சத்துக்களால் உருவாகிறது. செடி அல்லது மரம் வளரும்போது இந்த எண்ணெய்ப் பொருள்கள் உருவாகின்றன. இந்த எண்ணெய்களை ரசாயனப்படி அலசிப் பார்த்தால், மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டவை.
சில நேரங்களில் இந்த எண்ணெய்ப் பொருட்கள் தானாகவே அமைப்பில் சற்று எளிமையாகி ஆவியாகிவிடுகின்றன. அப்போதுதான் மலரில் இருந்து வாசம் வீசுகிறது. ஒரு மலரின் வாசம் அதற்கு ஆதாரமாக உள்ள எண்ணெய்களின் கலவையைப் பொறுத்தே அமைகிறது. வெவ்வேறு கலவைகளின் வெவ்வேறு வாசனைகள் உள்ளன. இந்த எண்ணெய்ப் பொருள்கள் மலரில் மட்டுமே இருப்பதில்லை. இலை, பட்டை, வேர், விதையில் கூட உள்ளன. ஆரஞ்சு, எலுமிச்சை, ஆகியவற்றில் பழங்களிலும், யூக்கலிப்டஸ் மரத்திலும், இலையிலும், பாதாமின் விதையிலும் இந்த நறுமணம் உள்ளது.
No comments:
Post a Comment